பக்கம்:பட்டத்தரசி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இன்றுமுதல், நமதுதமிழ்ச் சங்கந்-தன்னில்
இவளுக்கும் இடந்தந்தோம். என்றான் வேந்தன்.
நன்று நன்று என றிட்டார் சபையோர்; மன்னன்
தங்கைதனைப் புலவரிடை அமரச் செய்தான்.
குன்றுகளின் இடையிலொரு மான்போல்; மேகக்
கூட்டத்தின் நடுவிலொரு வான வில்போல்,
மின்னிடையாள் மன்றத்தில் காட்சி தந்தாள்,
வெண்ணிலவைத் தன்முகத்தால் அங்கு தங்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பட்டத்தரசி.pdf/43&oldid=1518518" இலிருந்து மீள்விக்கப்பட்டது