இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பதைப்போடு எதிர்நின்ற மகனைப் பார்த்துப் பார்வதியாள், “பாட்டென்ன ஆயிற்” றென்றாள். முதிராத ஓர்விதையை, நிலத்தில் நட்டால், முளைத்திடுமா எங்கேனும்?' என்று, கூறிப் புதிதாக நீர்எழுதித் தந்த பாடல் பொருட்குற்றம் உடையதுவாம் அப்பா-என்றான். கொதித்திட்டான் பரமசிவன், 'கவிதை எங்கே கொடுஅதனே' எனப்பெற்று விரைந் தெழுந்தான்!