90 95 100 7615 110 புன்றலை யிரும்பாதவர் பைந்தழைமா மகளிரொடு பாயிரும் பனிக்கடல் வேட்டஞ் செல்லா துவவுமடிந் துண்டாடியும் புலவுமணற் பூங்கானன் மாமலை யணைந்த கொண்மூப் போலவுந் தாய்முலை தழுவிய குழவி போலவுந் தேறுநீர்ப் புணரியோ டாறுதலை மணக்கு மலியோதத் தொலிகூடற் றீது நீங்கக் கடலாடியும் மாசுபோகப் புனல்படிந்து மலவ னாட்டியு முரவுத்திரை யுழக்கியும் பாவை சூழ்ந்தும் பல்பொறி மருண்டு மகலாக் காதலொடு பகல்விளை யாடிப் பெறற்கருந் தொல்சீர்த் துறக்க மேய்க்கும் பொய்யா மரபிற் பூமலி பெருந்துறைத் துணைப்புணர்ந்த மடமங்கையர் பட்டு நீக்கித் துகிலுடுத்து மட்டு நீக்கி மதும கிழ்ந்து மைந்தர் கண்ணி மகளிர் சூடவு மகளிர் கோதை மைந்தர் மலையவு நெடுங்கான் மாடத் தொள்ளெரி நோக்கிக் கொடுந்திமிற் பரதவர் குரூஉச்சுட ரெண்ணவும் பாட லோர்த்து நாடக நயந்தும் வெண்ணிலவின் பயன்றுய்த்தும் 115 கண்ணடை இய கடைக்கங்குலான் மாஅகாவிரி மணங்கூட்டுந் 120 தூஉவெக்கர்த் துயின்மடிந்து வாலிணர் மடற்றாழை வேலாழி ரியன்றெருளி னல்லிறைவன் பொருள்காக்குந் தொல்லிசைத் தொழின்மாக்கள்
பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/10
Appearance