உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காய்சினத்த கதிர்ச்செல்வன் றேர்பூண்ட மாஅபோல வைகறொறு மசைவின்றி 125 யுல்குசெயக் குறைபடாது வான்முகந்தநீர் மலைப்பொழியவு மலைப்பொழிந்தநீர் கடற்பரப்பவு மாரிபெய்யும் பருவம்போல நீரினின்று நிலத்தேற்றவு 180 நிலத்தினின்று நீர்ப்பரப்பவு மளந்தறியாப் பலபண்டம் வரம்பறியாமை வந்தீண்டி யருங்கடிப் பெருங்காப்பின் வலியுடை வல்லணங்கினோன் 135 புலிபொறித்துப் புறம்போக்கி மதிநிறைந்த மலிபண்டம் பொதிமூடைப் போரேறி மழையாடு சிமைய மால்வரைக் கவாஅன் வரையாடு வருடைத் தோற்றம் போலக் 140 கூருகிர் ஞமலிக் கொடுந்தா ளேற்றை யேழகத் தகரோ டுகளு முன்றிற் குறுந்தொடை நெடும்படிக்காற் கொடுந்திண்ணைப் பஃறகைப்பிற் புழைவாயிற் போகிடைகழி 145 மழைதோயு முயர்மாடத்துச் சேவடிச் செறிகுறங்கிற் பாசிழைப் பகட்டல்குற் றூசுடைத் துகிர்மேனி மயிலியன் மானோக்கிற் 150 கிளிமழலை மென்சாயலோர் வளிநுழையும் வாய்பொருந்தி யோங்குவரை மருங்கி னுண்டா துறைக்குங் காந்தளந் துடுப்பிற் கவிகுலை யன்ன