6 செறிதொடி முன்கை கூப்பிச் செவ்வேள் 155 வெறியாடு மகளிரொடு செறியத் தாஅய்க் குழலகவ யாழ்முரல முழவதிர முரசியம்ப விழவறா வியலாவணத்து மையறு சிறப்பிற் றெய்வஞ் சேர்த்திய 160 மலரணி வாயிற் பலர்தொழு கொடியும் வருபுன றந்த வெண்மணற் கான்யாற் றுருகெழு கரும்பி னொண்பூப் போலக் கூழுடைக் கொழுமஞ்சிகைத் 165 தாழுடைத் தண்பணியத்து வாலரிசிப் பலிசிதறிப் பாகுகுத்த பசுமெழுக்கிற் காமூன்றிய கவிகிடுகின் மேலூன்றிய துகிற்கொடியும் பல்கேள்வித் துறைபோகிய 170 தொல்லாணை நல்லாசிரிய 1 ருறழ்குறித் தெடுத்த வுருகெழு கொடியும் வெளிலிளக்குங் களிறுபோலத் தீம்புகார்த் திரை முன்றுறைத் தூங்குநாவாய் துவன்றிருக்கை 175 மிசைக்கூம்பி னசைக்கொடியும் மீன்றடிந்து விடக்கறுத் தூன்பொரிக்கு மொலிமுன்றின் மணற்குவைஇ மலர்சிதறிப் பலர்புகுமனைப் பலிப்புதவி 180 னறவுநொடைக் கொடியோடு பிறபிறவு நனிவிரை இப் பல்வே றுருவிற் பதாகை நீழற் செல்கதிர் நுழையாச் செழுநகர் வரைப்பிற் செல்லா நல்லிசை யமார் காப்பி 185 னீரின் வந்த நிமிர்பரிப் புரவியுங்
பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/12
Appearance