90 குரற்கு ஆண்டலை ஒப்புவைத்து விளித்தல் குறித்தார். இது வாமம் பாடுதல் போன்றது. கூளி பேய்க்குத் தொழில்செய்வன. கதுப்பிகுத்து - தலைமயிரைத் தாழவிட்டு. பேய்மகள் அசை தத்துவன்றவும் என்க. பேய்மகள் ஆடி நெருங்கவும். "அசைவளிக் கசைவந் தாங்கு என்ற முல்லைப்பாட்டிற் போலக்கொள்சு. "பேய்கதுப் பிகுத்தாட" 1-101. என்பது சிலப்பதிகாரம். ஈண்டு அசை இ-இளைத்து என்றார் உரை காரர். "பேய் பறை கொட்டி னாடாதோ கூத்து' " அ எனபதனால் ஆண்டலையாடுதற்குப் பேயசைதல் கூறினார். தலேயன்றி இஃதோர் கூத்தாகாதென்பது தோன்ற அவ்வினையாத் குறித்தார். பிணந்தின் யாக்கைப் பேய்மகள் என்றார் உயர்திணை யிற் சேர்க்கப்பட்டு இதுசெய்வதே யென்னும் கருந்தால். பிணந் தின்னுதலாற்றன் யாக்கையை யுடைய பேய்மகள். 6--று. (திரிகடுகம் 60) "பேய்ப் பிறப்பிற் பெரும் பசியும்" என்பதனாற் பசிமிகுதியைப் பிணத்தானும் அவிக்கக் கருதுதல் இதன் இயல்பு. ஒரி, கூகை, ஆண்டலை, கூளி இவையும் பிணந் தின்டனவேயாம். பேய்மகள் துவன்றவும் என்றது முன் மக்கள் நெருாகிய மன்றம் இங்ஙனமாயிற்றென்பது தோன்ற நின்றது. 81-265 கொடுங்கான் மாடத்து நெடுங்கடைத் துவன்றி வளைந்த தூண்கள் தாங்கிய மாடத்தின் நெடியதலைக் கடையில் நெருங்கி. இங்ஙனங் கொள்ளாது கொடுங்காற் பேய்மகள் றியையர் உரைகாரர். அது துவன்றவும் என்றதன் மேல் வந்தத னால் ஆசிரியர் கருத்தன்ன மை எளிதிலுணரலாம். வளைந்த தூண் என்ற தன்னுள் உருண்டுவளைந் த தூண் என்று சதிர வடிவத்தூண் அல்லாமை குறித்தது. வட்டப்பறையைக் கொடும் பறை (துரைக்.524) என்பது காண்க. இவ்வாசிரியரே பெரும்
பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/105
Appearance