93 கீழ்கடலில் விட்டொனும்" (விக்கிரமசோழனுலா) என்பது பற்றி மேல்கடல் குறையச்செய்த பெருவிக்கிரமத்தை இது குறிப்ப தெனினுமமையும். வான் வீழ்க்குவன் - வானத்துள்ளனவற்றைக் கீழ்வீழ்த்தல் செய்வன். "விசும்பிற் றூங்கெயின் மூன் றெறிந்த சோழன் " (சிலப். வாழ்த்து) செய்தியை நோக்கிற்று. "வீங்குதோட் செம்பியன் சீற்றம் விறல்விசும்பிற் றூங்கு மெயிலுள் தொலைத்ததால்' என்றார் பழமொழியினும் " தூங்கெயி லெறிந்த நினூங்கணோர்" என்பது புறம் (39). வளி மாற்றுவன் - காற்றைத் தன் விருப்பப்படி வியங்கும் எண்ணம் மாற்றிக்கொள்வன். இது இவன் முன்னோன், " நளியிரு முந்நீர் நாவா யோட்டி வளி தொழி லாண்ட " (புறம். 666) செய்தியை நோக்கிற்று. இவ்வாறு இவன் குலத்தோர் பலர் ஒரோர் காலத்துச்செய்தன எல்லாம் இக்காலத்தே யிவனொருவனே செய்வ னென்று கண்டார் சொல்லவென்க. புறப்பாட்டில், "எரி நிகழ்ந்தன்ன செலவிற் செருமிகுவளவ' எனக் கூறுதல் கொண்டு இவனே எரியாய் நிகழ்தலான் அதனை வேறு கூறினாரில்லைபோலும். அகழ்க்குவன் என்பது முதலாக வருவனவற்றைத் தன்மைச் சொல்லென்று கொண்டு இப்பாட் டுடைத் தலைவனே இங்ஙனம் இங்ஙனஞ் செய்வனென்று தான் முன்னியதுறை போகலின் என்றாலும் இயையும். இவ்வடிகளின் கருத்தைப் புறப்பாட்டில், "வேண்டியது விளைக்கு மாற்றலை "வேண்டிடத்தடூஉம் வெல் போர் வேந்தே" (38) (41) எனவும் இப்பாட்டுடைத் தலைவனைக் கூறியவற்றோடு ஒப்பு நோக் கிக் கொள்க. இவ்வாறு தான் நினைத்த போர்த் துறைகளிற் றட்ட றப் போதலான் இஃது,
பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/108
Appearance