உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 ளினு மமையும். இருங்கோவேள் இவனாட்டத்துப் பிடவூரிலிருந் தவன். இவன் குலத்தொடு தலைசாயவென்க. "இருங்கோ வேண்மா னருங்கடிப் பிடவூர்" என்பது புறம் (305) பிடவூர் இப்பொழுது அரியலூர்ப் பற்றிலுள்ளது. இனித்தன்னாடும் ஊரும் வளம்படுத்துதல் கூறுகின்றார். காடு கொன்று நாடாக்கி காடுகொல்லுதல் பாலமேனும் அதை நாடாக்குதற் பொருட்டுச் செய்தல் குறித்தார். கொன்ற பாவங்கெட ஆக்கி என்பது கருத்து. நெற்செய்யப் புற்றேயுமாறு போல நாடாக்குதற்கட்காடு கொல்லப்பட்ட தென்பதறிக. மேற் பிறநாட்டிற் செய்த போரும் இந்நாட்டிற்குத் துணையாதல் உய்த் துணர்ந்து கொள்க. கொன்று என்னும் வினையாற் பாவங்குறித்தார். என அறிக. குளந்தொட்டு வளம்பெருக்கி - அக்காடிருந்த இடத்து நீர்நிலைகளைத் தோண்டி அவற்றின் புறவாயில் வயல்வளம் பெருகச் செய்து. பிறங்குநிலை மாடத்துறந்தை போக்கி - விளங்கியுயர்ந்த பல நிலை மாடங்களையுடைய உறந்தையென்னுந் தன் தலைநகரை நீள வளர்த்து. "போகல் நிளல்" என்பது தொல்காப்பியம். இறை 286-90. கோயிலொடு குடிநிறீஇ- தெய்வங்கள் கொண்ட பலகோயில்களுடன் அவற்றை வழிபடுதற்குரிய குடி மக்களையும் நிலைபெறுவித்து. இவரே பெரும் பாணாற்றிற் 'பல்குடி கெழீ இ. ........ விழவு மேம்பட்ட பழவிறன் மூதூர் என்பதனால்," ஊர்க்குப் பல குடி கூறுதல் காண்க. புகுதற் கெளியவான வாயில் களையும் அவ்வாயிற் கதவிற் புழைகளையும் அமைத்து. புழை இக் காலத்துத் திட்டி வாயில் என்று வழங்கப்படும். இனிப்புழை எயி வின்றலையில் அம்பெய்தற் கமைத்த புழை யெனினு மமையும். ஞாயில் என்பது அவ்வாறெய்தவர் பகைவரான் எய்யப்படாமல்