இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
10 விருங்கோவேண் மருங்குசாயக் காடுகொன்று நாடாக்கிக் குளந்தொட்டு வளம்பெருக்கிப் 285 பிறங்கு நிலைமாடத் துறந்தை போக்கிக் கோயிலொடு குடிநிl இ வாயிலொடு புழையமைத்து ஞாயிறொறும் புதைநிறீஇப் பொருவேமெனப் பெயர்கொடுத் 290 தொருவேமெனப் புறக்கொடாது திருநிலைஇய பெருமன்னெயின் மின்னொளி யெறிப்பத் தம்மொளி மழுங்கி விசிபிணி முழவின் வேந்தர் சூடிய பசுமணி பொருத பரேரெறுழ்க் கழற்காற் 295 பொற்றொடிப் புதல்வ ரோடியாடவு முற்றிழை மகளிர் முகிழ்முலை திளைப்பவுஞ் செஞ்சாந்து சிதைந்த மார்பி னொண்பூ ணரிமா வன்ன வணங்குடைத் துப்பிற் றிருமா வளவன் றெவ்வர்க் கோக்கிய 30 வேலினும் வெய்ய கானமவன் கோலினுத் தண்ணிய தடமென் றோளே.