2 செண்டு கொண்டுகரி கால்னொரு நாளிலிமையச் மால்வரை திரித்தருளி மீளவதனைப் சிமைய பண்டு நின்றபடி நிற்கவிது வென்றுமுதுகிற் பாய் புவிக்கொடி பொறித்தது மறித்தபொழுகே. என வருந்தாழிசை யானும், சிலப்பதிகாரத்து இந்திய விழவு, ரெடுத்த காதை யுரையில் அடியார்க்கு நல்லார் மேற்கோள் காட்டிய "கச்சி வளைக்கச்சிக் காமக்கோட் டங்காவன் மெச்சி யினிதிருக்கு மெய்ச்சாத்தன் - கைச்செண்டு கம்பக் களிற்றுக் கரிகாற் பெருவளத்தான் செம்பொற் கிரிதிரித்த செண்டு' என வரும் வெண்பா வானும் கரிகாலற்குக் கேட்கப் படுதலாத் திருமாவளவன் அக்கரிகாலனே யாவன் என்று துணிந்தனர் என்று நன்கு தெரியலாம். ஈண்டும் பின்னர்க் காட்டிய வெண்பா கரிகாலனுக்குப் பெ வருவளத்தான் என்பதும் பெயரெனத் தெரியக் கிடப்பது. சிலப்பதிகாரப் புகார்க்காண்ட மங்கலவாழ்த்துப் பாடலி னிறுதியில், "இப்பா லிமயத் திருத்திய வாள்வேங்கை யுப்பாலைப் பொற்கோட் டுழையதா - வெப்பாலும் செருமிகு சினவேற் செம்பியன் ஒருதனி யாழி யுருட்டுவோ னெனவே" என வருவதன்கண் இமையத்து வேங்கை யிருத்தியவன் செம்பியன் என்னுஞ் சோழர் குடிப்பொதுப் பெயராற் கூறப் பட்டான். ஈண்டு அடியார்க்குநல்லார் செம்பியன் என்பதற்குக் கரிகாலன் எனவுரை கூறினார். மேலே காட்டிய “கச்சிவளைக் கச்சி" என்னும் வெண்பாவினாற் கரிகாலனுக்குக் கச்சிமாநகருடன் ஒரு தொடர்பு கூறப்பெற்றுள்ளது. இத்தொடர்பு "கரிகாலனை நண்ணுவாரெழில் கொள் கச்சி' (கச்சியே கம்பம். ஆளுடைய பிள்ளை) எனவருந் தேவாரத் திருப்பாட்டடியானும் உணரப்படுவது. பட்டினப்பாலை ஆசிரியர் தாம்பாடிய பெரும்பாணாற்றுப்படையாற் றொண்டை நாட்டையும் அதன் தலைநகராகிய கச்சி வெஃகாவையும்,
பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/18
Appearance