உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 பெருவளத்தானையும் (அகம். 125) வில்கெழுதானைப் பசும்பூட் பாண்டியனையும் (அகம். 162) பாடியவர். நக்கீரனாரும் மேற்குறித்த இருவரையும் அகப்பாட்டில், எனவும், கரிகால் இடையாற் றன்ன" (அகம்.141) 'நாடு பலதந்த பசும்பூட் பாண்டியன்' (அகம்.253) எனவும், பாடுதல் காண்க. இவற்றால் நக்கீரர் பரணர் முதலிய இப்புலவர் காலத்தவனான கரிகால் ஒருவனேயாதல் நன்குணர்ந்து கொள்ள லாம். இளஞ்சேட் சென்னி உருவப்பஃறேருடைமையால் உருவப் பஃறேரிளஞ்சேட் சென்னியெனவும், நெய்தலங்கானல் என்னும் ஊரில் (புறம்.10 பார்க்க) வதிந்தமையால் நெய்தலங்கான லிளஞ் சேட்சென்னி என்வும், இவனே சேரமான் பாமுளூரெறிதலாற் பாமுளூரெறிந்த இளஞ்சேட்சென்னி எனவும், இவனே செருப்பாழி யெறிதலாற் செருப்பாழி யெறிந்த இளஞ்சேட் சென்னி எனவும் (புறம். 370 378) பெயர் வழ்ங்கப்பட்டனன் என்று துணிவதே நூலோடு பொருந்துவதாகும். இளஞ்சேட் சென்னியை இளம்பெருஞ் சென்னி யெனவுங்கூறுவர். (அகம். 375) பெருநாடுடைய கோவேந்தற்கு ஊர்ப்பெயரடை கொடாமையும் அவன் தம்பியர்க்கே ஊர்ப்பெயடைகொடுத்து வழங்குவதும் நுனித்துநோக்கியறிக. நலங்கிள்ளி சேட் சென்னிக்கு இவ்வூரடை வாராமையின் இது துணியலாம். இதுபோல் ஒரு ரடையே பெற்றுப் "பெருவளக்கரிகால்” என்று வழங்கியதென்றது நன்கு பொருந்தும். பெருவளம்-பெருவளநல்லூர். இது ஈக்கிசர் கரிகாலனுடையதாகக் கூறிய இடையாற்றிற் கணித்தாதல் கண்டு கொள்க. இவ்வாறே இச் சோழர் வழித்தோன்றி வல்லம் என்னும் ஊ கரிலிருந்த அக் குடியினன் ஒருவனைக், "கடும்பகட் டியானைச் சோழர் மருகன் நெடுங்கதிர் -நெல்லின் வல்லங் கிழவோன் (அகம்.356) என ஒரூர்க் குரியவனாகக் கூறுதலுங் காண்க. மற்றுக் கரிகா லனைப் பொருநராற்றுப்படையுட், "காவிரி புரக்கு நாடு கிழவோனே