உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

" 20 "வருந்தா தேகி வஞ்சியுட் புக்கனம் " என மணிமேகலையுள் வருதலான் இஃதுணரலாம். புகார்க்கு "ஒடுக்கங்கூறார்” என்று இளங்கோவடிகள் கூறுதலான் அவர் சிலப்பதிகாரம் தொடங்கியபோது பட்டினம் நன்னிலையிலிருந்த தென்றும் பாடி முடித்தற்கு முன்னே அஃதழிந்ததென்றும் நினைத் துக் கொள்ளலாம். துறைமுகத்தைச் சிறப்பித்துப் "பட்டினம் பெறினும் வாரேன் என்று கூறியபோது அவ்வூர் இனிதிருத்தல் வேண்டுவதென்பத என் கருத்து.இங்குப், " பிறங்குநிலை மாடத் துறந்தை போக்கி என வருதற் கியையவே கிள்ளிவளவன், "பிறங்குநிலை மாடத் துறந்தை யோனே' எனக் கூறப்படுதல் காண்க. (புறம். 69) இந்நூலுள், "தெவ்வர்க் கோக்கிய வேலினும்' என்பதற்குப் பொருந்தப் "பொருநர்க் கோக்கும் வேலன்" (g.. 59) என இவன் பாடப்படுதல் நோக்கிக் கொள்க. ஈண்டுமை காரரும், "பொருவோர் பொருட் டெடுக்கப்பட்ட வேலினை யுடையனாய்' என்றது கண்டுகொள்க. இவன் கரிகால் வளவனின் வேறாதல் பொருநராற்றுப் படையுட் "கண்ணார் கண்ணிக் கரிகால் வளவன் எனக் கூறியதுபோலக் கூறாமல் இவனைப் புறப்பாட்டில் (39) "கண்ணார் கண்ணிக் கலிமான்" வளவ"