உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 குறும்பு செய்தவனாதல் பற்றி அவளைச் சாயவென்று நின்றது குறித்ததாம். மற்று ஒளியர், அருவாளர், பொதுவர் மூவரையும் வென்றது இவன் வரலாறு கூறிய சங்கப் பாடல்களிற் காண்டற் கில்லை. இங்ஙனங் காணப்படாமை கரிகாலற்கும் ஒத்தலான் பட்டினப்பாலைத் திருமாவளவன் கரிகாலன் என்று வாதிப்பார்க்கு இவ்வென்றி துணையாகாமை கண்டு தெளிக. பெருவளத்தானல்லா மல் மாவளவன் என்னும் பெயர் கரிநாலற்கு யாண்டும் வழங்காமையு நினைக்க. கிள்ளிவளவனை நெடுமாவளவன் என்பது புறப்பாட்டிற் (228) காண்க். "பெருவளக் கரிகால் ’” என அகப்பாட்டும் (125) கரிகாற் பெருவளத்தான் எனப் புறப்பாட்டுக் கொளுவும் (65) வழங்கிக் காட்டலான் இக்கரிகாலற்குப் பெருவளம் என்பது ஓர் நல்லடையா மென்று துணியலாம். பெயர்க்கு முன்னும் பின்னும் வழங்கலான் இவன் முதலிலிருந்த ஊர்ப்பெயரோ என ஊகித்தலுமாகும். பெருவள நல்லூர் என்பது இவனது இடையாற்றிற்கு அணித் தாகிய தோர் ஊர் ஆதல் நினைக்க. இவ்விரண்டூர்களும் உறை யூர்க்குச் சேய்மையவாகாமைகண்டு கொள்க. இவன் தந்தையை, நெய்தலங் கான லிளஞ்சேட் சென்னி" (புறம்.10) என ஊர்ப்பெயரிட்டு வழங்கியதுபோல இவனையும் வழங்கிய தென்று நினைத்தல் தகும். பட்டினப்பாலைக் கியைந்த பெரும்போர்ச் சிறப்பு இக்கிள்ளி வளவனே யுடையனாதல் அவனைப்பற்றிப் புற நானூற்றிற் சோழர் பலரினும் அதிகமாகக் காணப்படும் பாடல்க டோறுங்கண்டு கொள்ளலாம். இவன் வெள்ளைக்குடி நாகனாராற், "குடிபுறந் தருகுவை யாயின் அடிபுறந் தருகுவ ரடங்கா தோரே' (புறம்.35) என்று அறிவுறுத்தப்பட்டதற்கியையப் பட்டினப்பாலையுட், "கோயிலொடு குடிநிறீஇ" என்று சிறப்பிக்கப்பட்டான் என்றலும் ஒன்று.