உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 எனப் பாடப்படுதலான் இவன் புகார் நகருடையனாதல் நன் கறியலாம். இவனுக்குச் சேட்சென்னி யென்பதும் பெயரென்பது (புறம். 27) "சேட்சென்னி நலங்கிள்ளி" என்பதனாலறிக. இவன் தம்பி இளஞ்சேட்சென்னி அவ்வூரிலே ஒரு புறத்தில் தனி அரண்மனையிலிருந்தவனாவன். இவன் இறந்த பின்னர் இவன் மனைவி வயிற்றிற் றோன்றிய கரிகாலன் இவ்வூரில் வதிதற்கேற்ற துணையின்மையாலோ வேறுபகையாலோ இவ்வூரை விட்டு நீங்கிப் பிறவூர்களில் வதிய வேண்டிய நிலையுண்டாயிற்றென் றுணரப்படுவது. சுடப்பட்டுயிருய்ந்து கருவூரிற் சென்று வதிந்த னன் என்று கூறுவா. வ "கழுமலத் தியாத்த களிறு கருவூர் விழுமியோன் மேற்சென் றதனால்" (பழமொழி) வ் என்னும் பாடல் இதற்கு ஆதாரம் என்பர். இக்கரிகாலன் வூரை விட்டு நீங்கிய செய்தியையே மணிமேகலை, "மன்னன் கரிகால் வளவனீங் கியநாள் இந்நகர் போல்வதோ ரியல்பின் பொன்னகர் வறிதாப் போதுவர்' தாகிப் என்பதனாற் கூறிற்றென்று நினைத்தல் பொருந்தும். மிக விளமையிலே அரசனாதல், " இளமை நாணி முதுமை யெய்தி" எனவரும் மணிமேகலையானும் அறியலாம். வன் இங்ஙனமன்றிக் கரிகாலன் வடநாட்டுப் படையெடுப்பை இது குறித்ததென்பதற்கு ஓரடையாளமும் ஈண்டில்லாமை நன்கு ஆராய்ந்து தெளிக. அன்றியும் ஒரு போரசன் படையெடுத்துப் பிறநாடு செல்லும்போது அவனிருந்த ஊர் காப்பின்றி வறிதாகப் போயிற்றென்று பாடுதல் உசிதமா என்று அறிஞரே வினாவியறிக. ஒருவர்க்கும் இப்படியென்று தெரியாமல் அரசுக்குரியவன் ஊரை