32 "செருவெங் காதலிற் றிருமா வளவன் புண்ணியத் திசைமுகம் போகிய வந்நாள்'" (சிலப். இந்திர 90-94) என்பது பட்டினப்பாலை கொண்ட திருமாவளவற்கு இனி து பொருந்தும். "வடவர் வாட" என அவன் சிறப்புக்கூறிய பட்டினப் பாலை கூறுதலான் இதனை அறியலாம். செருவெங் காதலிற் புண்ணியத் திசைமுகம் போகிய செய்தியும், மன்னன் கரிகால் வளவன் புகார் நீங்கிய செய்தியும் ஒன்றெனத் துணிதற்கு ஏற்ற சொல்லோ வேறு மேற்கொளோ இன்மைகாண்க. கரிகாலன்றான் திருமாவளவன் என்பதற்குப் பிறர் காட்டக் கூடிய மேற்கோள் இஃதொன்றேயாம். இம்மேற்கோள் நீங்கிய என்னுஞ் சொல் ஒன்றே கொண்டு படை யெழுச்சியில் அவன் வடநாடு சென்ற நீக்கத்தைக் குறிப்பதென்று ஒருதலையாகத் துணிதற்குரிய தாகாமையின் இஃதொன்றே கொண்டு சிறந்த மேற்கோள்களாற் பலவகையானுந் தெளியப்படும் வேற்றுமையை ஒற்றுமைப் படுத்தல் இயலாமை நோக்கிக் கொள்க. சங்கத்து நூல்கள் பலவற்றினுங் கரிகாலனுக்குப் புகார் நகர் கூறாமை கற்றார்க்கு வியப்பைத்தருவதாகும். இம் மணிமேகலை மட்டும் தனக்கு முந்தியவும் ஒத்தவுமாகிய சங்கநூல்களிற் காணப் படாத தொன்றைக் கூறுவது. கரிகாலனை நேரிற் கண்டு பாடிய முடத்தாமக் கண்ணியார் தாம் பாடிய பொருநராற்றுப் படையுள் இவன் ஊரே குறியாமல் ஒழிதலும் நோக்கிக்கொள்க. இக் கரிகாலன் வெண்ணிப் போர் வென்றபோது ஆண்டு இவனுக்குத் தோற்றுப்புறப் புண்ணாணி வடக்கிருந் துயிர்துறந்த சேரலாதன் மனநிலையையும் அவனுடன் இறந்த போர் வீரராகிய சான் ே உள்ளப் பாங்கையும், அப்போர்க்களத்தே இவன் நேரிற்கண்டு தன் மனம் வேறுபட்டு அரசு கிள்ளிவளவனே ஆளவிட்டுத் தான் இடை யாற்றிலோ பெருவளநல்லூரிலோ வதிந்து இனிது துய்த்து அறிந்த அந்தணரோடு ஆராய்ந்து கற்புடை மகளோடு வேள்வி பல வேட்டு அறிவிலே பொழுது போக்கினான் என்று நினைத்தற்கே இவன் சாவிற்பாடிய கருங்குழலாதனார் பாட்டு இடந்தருகிறது. இப்பாட்டு வருமாறு, (புறம்.224) "அருப்பம் பேணா தமர்கடந் ததூஉம்"
பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/47
Appearance