44 தென்று கருதினாரோ தெரிகிலேன். இணையேரி என்பதற்கு வேறு வேறு கூறுவாரும் உண்டு. ஏற்பது கொள்க. இனிக் கோட்டத்தை யும் ஏரியையுமடுத்துள்ள திண்காப்பின் வெண்கோயிலுள்ள கடிநகர் கூறுவான் புகுகின்றார். என்க. புலிப் பொறிப் போர்க்கதவிற்றிருத்துஞ்சுந்திண் காப்பின் சோழர்க்குரியது தெளியப் புலியடையாளமிடப்பட்டுத் தம்முட் பொருது சேரும் இணைக்கதவங்களையும் நிதி துஞ்சுதலாற் றிண்ணிய காவலையுமுடைய வெண்கோயில் மாசூ மிகுதியான செலவிட்டும் அழியாதிருத்தல் குறித்துத் திருத்துஞ்சும் என்றார். அந்நிதிக்கேற்பத் திண்ணிய வேண்டினார். திண்காப்பின் வெண்கோயில் கோயில் அரச மாளிகை. காவல் போர்க்கதவின் மேலும் திண்காப்பு என்றது வீரர் காவலை. "போரமை கதவப்புரை தொறும் " (நற். 132) என்றது காண்க. சோழர் பாண்டியனை வென்ற விடத்தும் அவன் எயிற் கதவங் களிற் புலி பொறித்தல் கேட்கப்படுதலான் இவர் கதவிற் றங்கொடி யடையாளமிடுதல் வழக்கென்று துணியலாம், "தென்னம் பொருப்ப னன்னாட் டுள்ளும் ஏழெயிற் கதவ மெறிந்துகைக் கொண்டு பேழ்வா யுழுவை. பொறிக்கு மாற்றலை" எனப் புறப்பாட்டினும் (33) வந்தது. திண்காப்பின் வெண் கோயில் மாசூட்டுங் கடிநகரென்க. வெண்கோயில் என்று வெண் சுதை தீற்றிய ராஜகிருகத்தைக் குறித்தார். அது திண்காப்புடைத் தாயும் மாசு ஊட்டப்படுதற்கு ஓரினிய அரிய ஏதுக் கூறுகின்றார். இது நீர்ச்செறுவி னீணெய்தற் பூச்சாம்ப வைத்தவாறு போன்ற தொன்று. 42-45 புகழ் நிலை இய மொழிவளர் சொல் பிற நாட்டும் பரக்க. 1 இம்மையிற் புகழ் நிலைத்த அறனிலை இய அகன் அட்டில் மறுமைக்கு அற நிலைத்த அகன்ற சோறடுஞ் சாலை. இம்மை மறுமைக்குறுதியாய புகழும்
பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/59
Appearance