உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 மடிதல் கூறினார். இவர் துயின் மடிந்தபோது இதற்கு முன்னர்த் துயின்றவர் விழித்துக்காப்பர் போலும். வால் இணர் மடல் தாழை - வெள்ளிய அரும்பின் மடலையுடைய தாழை. தாழை மலரும் பூவுடைய தன்மையறிக. குவிந்த பூவுடையது. தாழையை யுடைய வேலாழி என்க. வேலா ஆழி -- கரைக்கடல். நல்லிறை வன் என்றார்; அத்தகையான் பொருள் காத்தற்குச் சிறப்புண் டென்று தெரிய. மாக்கள் 121-125. தொல்லிசைத் தொழின் மாக்கள்-; -தந்தொழி லான் மரபுபற்றி வந்த பழைய கீர்த்தியையுடைய மாந்தர். என்றார் தந் தொழிலல்லது வேறு கல்லாமையான். இவரைக் கதிர்ச் செல்வன் பூண்ட மாவிற்குவமை கூறினர் நாளும் அசைவின்றித் திரிதல்பற்றி. இதனாற் கதிர்ச் செல்வனாக இப் பாட்டுடைய நல்லிறைவனைக் கருதுதல் புலனாம்; இச் சோழன் சூரியகுல மாதலு நினைக்க. "ஞாயிறு விசும்பிவர்ந் தன்ன செம்பியர் மருகன்' " (புறம்.228) எனவும், "ஞாயிறு காண திடும்பைகொள் பருவாறீர (புறம்.171) எனவும் வருமிடங்களில் இக் கிள்ளிவளவனையே ஞாயிற்றோடு வமித்தலான் உண்மையுணர்க. காய் சினத்த கதிர்ச்செல்வனோடு வமித்தலான் இவனுங் காய் சினத்தவனோ வென்றைய முறாமைக்கு அவன்கணுள்ள கதிரே (ஒளியே) உடையனென்று கொள்ள நல்லிறைவன் என்றார். இறைவனுக்குரியவாய் வேலாழிலியன் தெருவிற் கடலினின்று போந்து மரக்கலமேற வேண்டிக்கிடத்த லான் காத்தல் இன்றியமையாதாயிற்று. காய்சினத்த என்னும் அடை நல்லிறைவற்கும் பொருந்தும் என்று கொண்டு சிலேடை யாற் கா யப்பட்ட சினத்தையுடைய இறைவனெனினுமமையும். இதனைக் காய்சின வழுதி என்னும் பெயர் போலக் கொள்க. சினங்காய் வழுதி என்று பொருளாதல் காண்க. பெரியாரும்