61 "காய்சினவேந்தே" (திருவாய்.) எனப்பாடு தல் காண்க. சடகோபன் என்னும் பெயரும் இவ்வாறு வந்ததொன்றாம். கதிர்ச்செல்வ னுக்குத் தேர் கூறுதல் வடநூலார்க்கும் ஒக்கும். அத்தேரை ஈர்ப்பன என்பதும் அவர்க்கு ஒக்கும். உல்கு செயக் குறைபடாது - அரசிற்குரிய சுங்கத்தைத் தகச் செய்தலாற் பண்டங்கள் ஏற்றுதலும் இறக்குதலும் குறைபடாது என்க. இதனால் இவ்வாசிரியர் சுங்கத்தாற் பண்டங்கள் ஏற்றுமதி இறக்குமதி குறையுமென்று நன்கு தெளிந்தனராவர்; அங்ஙனம் உண்டாகுங் குறையீண்டில்லையென்று பண்ட மிகுதி குறித்தார். குறையாமல் வருதற்குப்பெய்யும் பருவமாரியை உவமை கூறினார். பருவமாரி போலப் பொழியவும் கடற்பரப்பவும் என்க. த 126-130. பொருள்கள் கடலினின்று மலையினும் மலையி னின்று கடலினும் ஏறிச் சேறலான் வான் முகந்தநீர் மலைப்பொழிய வும், மலைப் பொழிந்த நீர் கடற் பரப்பவும், பெய்யும் பருவ மாரி போல என்று எடுத்து விளக்கினார். வான்முகந்தநீர் என்பது கடலினின்று வானம் முகந்தநீர் என்று பொருளாதல் தெள்ளிது. நீரினின்று நிலத்தேற்றவும் என்புழி நிலம் மலைநிலவரையுங் கொள்க. (புறம். 60) "கழியுப்பு முகந்து கன்னாடு மடுக்கும் என்பதனாலறிக. நிலத்தினின்று என்பதற்கும் மலை முதலிய நிலங் (131-135) களினின்று என்று கொள்க. அளந்தறியாமை கூறினார். அளவு- பொருளளவு, பல பண்டமாதலின் வரம்பறியாமை - காலவரம்பறியாமல் இடவரம்பு கூறின் வந்தீண்டி என்றதற்கு மாறாகும். இடவரம்பறியாமற் றடுமாற வந்தீண்டி என்பது கருத்தாயின் அமையும். அருங்கடி என்பது திண்ணிலைக்கதவம் முதலியவற்றைக் குறிக்கும். பெருங்காப்பு - பலர்நின்று காப்பது குறித்தது.
பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/76
Appearance