63 காலதென்பது எளிதிற் பற்றுதற்குரிய காலென்னிற் பொருந்தும். புலவர் மரபு போலும். " ஆரைவாழ் வருடை வன்றலை மாத்தகர்' (503) என்னும் மழைபடு கடாத்துரையினும், "மாவு மாக்களு மையறி வினவே" (தொல். மரபியல்) என்பதற்குப் பேராசிரியர் உரையினும் நோக்கிக்கொள்க. கூரு கிர்க் கொடுந்தாள் ஞமலியேற்றையென்க. ஞமலியேற்றை ஆண்டு காவற்கு வளர்க்கப்படுவது. ஞமலியேற்றை வருடைத் தோற்றம் போலத் தகரோடுகளுமுன்றில். எவ் 141 - 145. மேழகத்தகர் முன்னே வந்தது. தகர், வென்றிக்கு வளர்ப்பனவாகும், முன்றிற் படிக்கால் என்க. படிக்கால்- ஏணி. அடுத்தடுத்துத் தொடுக்கப்பட்ட நீளமான ஏணி. வுயரமும் ஏறுதற்கு நெடுமையும், ஏறுவார் கால் வைத்தற்குக் குறுந் தொடையும் ஏணிக்கு வேண்டினர். படிக்கால் சார்த்தி யேற வேண்டியதிண்ணை. கொடுந்திண்ணை திண்ணையுமாம். சுற்றுத்திண்ணை யென்பர். வளைந்த கரைத் தெரு வேலாழி வியன்றெரு முன்றில். மழைதோயும் நெடுமாட மாதலால் நெடும் படிக்கால் வைத்தேறுதல் கூறினார். கடற் மாடமாதலின் மழை தோய்தல் கூறினார். பஃறகைப்பு - பலதடுப்பு. இவர் இவர் இவ்வளவில் வரலாமென்னும் முறைமைபற்றிப் பல தடுப்புக் கூறினார். இவை மாளிகையிற் பல கட்டணமாகும். (பதிற். 64-7). புழைவாயிற் போகிடைகழி - சிறு திறப்பும் பெருதிறப்புமுடைய நீண்ட இடைகழி. புழையை இக் காலத்துத் திட்டிவாயில் என்ப.(146-150). பொருநாற்றிற் பெண்பாலைக் கேசாதியாகக் கூறினார். இவ்வாசிரியர் சேவடி யென்று தொடங்கிப்பாதாதியாகக் கூறினார். அடிக்குச் செம்மை யும், குறங்கிற்குச் செறிவும், அல்குற்குப் பெருமையும், மேனிக்குத் துகிர் நிறமும், இயலுக்கு மயிலும், நோக்கிற்கு மானோக்கும்
பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/78
Appearance