30 2 விலங்குபகை யல்லது கலங்குபகை யறியாக் கொழும்பல்குடிச் செழும்பாக்கத்துக் குறும்பல்லூர் நெடுஞ்சோணாட்டு வெள்ளை யுப்பின் கொள்ளை சாற்றி நெல்லொடு வந்த வல்வாய்ப் பஃறி பணைநிலைப் புரவியி னணைமுதற் பிணிக்குங் கழிசூழ் படப்பைக் கலியாணர் பொழிற்புறவிற் பூந்தண்டலை மழை தீங்கிய மாவிசும்பின் 35 மதிசேர்ந்த மகவெண்மீ னுருகெழுதிற லுயர்கோட்டத்து முருகமர்பூ முரண்கிடக்கை ற 4 வரியணிசுடர் வான்பொய்கை யிருகாமத் திணையேரிப் 40 புலிப்பொறிப் போர்க்கதவிற் றிருத்துஞ்சுந் திண்காப்பிற் புகழ்நிலைஇய மொழிவளா வறனிலைஇய வகனட்டிற் சோறுவாக்கிய கொழுங்கஞ்சி 45 யாறுபோலப் பரந்தொழுகி யேறுபொரச் சேறாகித் 50 தேரோடத் துகள் கெழுமி நீறாடிய களிறுபோல வேறுபட்ட வினையோவத்து வெண்கோயின் மாசூட்டுந் தண்கேணித் தகைமுற்றத்துப் பகட்டெருத்தின் பலசாலைத் தவப்பள்ளித் தாழ்காவி னவிர்சடை முனிவ ரங்கி வேட்கு 55 மாவுதி நறும்புகை முனைஇக் குயிறம் மாயிரும் பெடையோ டிரியல் போகிப் பூதங் காக்கும் புகலருங் கடிநகர்த்
பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/8
Appearance