67 எடுத்த கொடிகளென்க. இக் கொடிகள் அரசர் நகரங்களினும் கடை வீதிகளினும் உண்மை, மாங்குடி மருதனார் மதுரைக் காஞ்சி யிற் கூறியன கொண்டு துணியலாம். ஆண்டு இந்நூலிற் கூறியவற் றோடு பெரிதும் பொருந்தவே, " ஓவக்கண் டன்ன விருபெரு நியமித்துச் சாறயர்ந் தெடுத்த வுருவப் பல்கொடி வேறுபல் பெயர வாரெயில் கொளக்கொள நாடோ றெடுத்த நலம்பெறு புனைகொடி நீரொலித் தன்ன நிலவுவேற் றானையொடு, புலவுப்படக் கொன்று மிடைதோலோட்டிப் புகழ்செய் தெடுத்த விறல்சா னன்கொடி கள்ளின் களிநவில் கொடியொடு நன்பல பல்வேறு குரூஉக்கொடி பதாகை நிலைஇ' (மதுரைக். 365-73) என வருதலானுண்மை யுணர்க. முருகாற்றிலும் " செருப் புகன்றெடுத்த (66 - 67) வெற்றிக்கொடி கூடலங்காடித் தெருவி லுண்மை கூறுதல் உணர்க. மற்றைக் கொடிகட்கெல்லாம் துகில் கூறாது இக் கொடிக்கு மட்டுங் கூறியது நோக்கியும் பசுமெழுக்கிட்டுப் பெரும்படைப்புப் படைத்தல் நோக்கியும் இவ்விறற் கொடிகள் ஓரடையாளம் உளவாக வைத்து இவ்வாறு உரைக்கப்பட்டது. "சிறுவழிப் படஞ்செய் பந்தர்க் கன்மிசை யதுவே " (புறம்.260) என்புழி "புடைவையாற் செய்யப்பட்ட பந்தர்க்கீழ் நட்ட கல் என்று கூறுதலான் உண்மையறிக. "பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல் வேலூன்று பலகையின் வேற்றுமுனை படுக்கும் (சுகம்.6) என வருவதுகொண்டு இவ் வடிகட்குப் பொருளிஃதென்று தெளிக. காழூன்று கவிகிடுகே வேலூன்று பலகையெனப்பட்ட தறிக. வீர சின்னமாகிய வேற்காம்புங் கிடுகும் நட்டுவைத்து அவற் றின் மேலே துகிற்பந்தரிட்டு அதன் மேலூன்றிய விறற்கொடி.
பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/82
Appearance