உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 கண்ட ஆணை வடிவாகிய விதிகள். ஆணை நல்லாசிரியர் - அவ்விதி களை நன்று ஆசரித்தலான் ஆசிரியரெனச் சிறந்தோர். தொல்லாணை யிஃதெனத் துணிதற்குப் பல கேள்வித்துறை போதல் வேண்டுவது குறித்தார். கேள்வித்துறை -சுருதி மார்க்கம் எனினுமமையும். வேதம் பலபல பாகுபாடுடைமையாற் பல கேள்வி என்றார். தொல் லாணை என்றதனால் இவ்வாணை ஆசிரியாதாகாமை நன்கறியலாம். உறழ்குறித்தெடுத்த வுருகெழுகொடி வாது குறித்துயர்த்திய உட் குக் கெழீஇய கொடி.. இது நாவலந் தீவு முழுதும் தாம் உறுதி யாகத் துணிந்ததையே புரிதற்குத் தகுமென்பதற்கு இத் தீவத்தின் அடையாளமாகிய நாவலின் கிளையை நட்டு அதன்கண் எடுப்பதோர் வாதத்துவசம் என்சு. அறை கூவுவார் நாவலோ நாவலென்பதும் "நாவலோ என்றழைக்கும் நாளோதை " என்பதும் "நாவலிட்டுழி கர்கின்றேம் (திருமாலை) என்பதும் இதனடியாக எழுந்தனவே யாம். இதன் வரலாற்றை நீலகேசித் தெருட்டில் குண்டலகேசி வாதச் சருக்கத்தில், "தண்டழைய பொழில்நாவற் சாகைநட்டுரை பெறாக் குண்டலகேசி' எனவரும் பகுதியிற் கண்டுகொள்க. தறுகட்கெடுத்த நடுகற் கொடியினும் கல்விப் பெருமிதம்பற்றி யெடுத்த கொடியா தலின் உருகெழு கொடியென்று மிகுத்துக் கூறினார். இதனாற் பிற சமயத்தர் இந்நாட்டிற் புக்கு வாது புரிதல் உண்டென்று தெளிவித்த வாறாம். நல்ல:சிரியர் என்றதனால் இவரொடு வாது புரிவார் பொல்லாராதல் குறித்தார். பலவகை விசேடங்களானும் இதுவே ஆசிரியர் கருத்தெனத் துணிக. கூம் 172-175. இனி, இவற்றிற்குப் பின்னே வங்கத்தின் பேறிய கொடியைக் கூறுகின்றார். வங்கம் என்பது சடலிற் குறித்த கரையிற் சேறல், தெய்வத்தின் அருளும் மக்கள் நன்முயற்சியும் சேர்ந்த நிலையிலாதலின் அவ்விரண்டுங் கலந்து பயன்படுவ தொன்றி னுள்ள கொடியைக் கூறினர் என்று. "செல்லா நல்லிசை யாளர் காப்பினீரின் வந்த " என மேல் இவரே கூறிக் காட்டுதலானில் உண்மையுணர்க. வருணன் வழிபாடு கேட்கப்படுதலானும், 27 'வளி தொழிலாண்ட உரவோன்' (புறம் நே