உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71 பைங்கொடி நுடங்கும் பலர்புகு வாயிற் செம்பூத் தூய செதுக்குடை முன்றிற் கள்ளடு மகளிர் எனப் பெரும்பாணாற்றிலும் வந்தது காண்க. "மணங்குவை இ மலர்சிதறிப் பலர்புகு நனைநறவு " (337-39) இனி, (பதிற்றுப்பத்து) எனக் கொண்டு குடங்களின்மேற் சந்தன முதலிய மணங்களைப் பரப்பிப் பூக்களைச் சிதறுதலாற் பலர் புகுதற்குக் காரணமான மனையிலுள்ள நறவு என்று கூறினு மமையும். "பைந்தார் பூட்டிச் சாந்துபுறத் தெறிந்த தசும்புதுளங் கிருக்கை" என வருதலா னுணர்க. (பதிற் 42) 181-185. நறவு நொடைக் கொடி - கள்விற்கு மிடமென்று காட்டுங் கொடிகள். பிறபிறவு நனிவிரைஇ - பிறபிறவிலைக் கெடுத் தன மிகக் கலத்தல் குறித்தது. பல்வேறுருவிற் பதாகை - பலவாக வேறுபட்ட வடிவுகள் எழுதப்பட்ட பெருங்கொடிகள். நீழற் செல்கதிர் நுழையாச் செழுநகர் வரைப்பின் - கொடிகளின் நிழலால் மேலே செல்லுங்கதிர் கீழே நுழையாத செழுமையை யுடைய நகரெல்லையி லென்க. செல்லா நல்லிசை யமரர் காப்பின் - தம்மை வழிபட்டாரைத் தப்பாது காத்தலான் இசை தம்மைவிட்டுச் செல்லாத தேவர் காவலால். நீரின் வந்த - கடலின்கண் வந்த எ-று. நீர்-கடல். நிமிர்பரிப் புரவி - நிமிர்ந்து செல்லுஞ் செலவினையுடைய குதிரை. இதற்கு நிமிர்ந்த செலவு வேண்டுதல் காண்க. உயர்ந்த புர வியைப் பிறதேயத்தினின்றும் வேண்டிக் களிற்றை அங்ஙனம் வேண்டாமை நன்குணர்ச.புரவியை வங்கத்தி னேற்றவும் இறக்கவும் இக்நாட்டார் தெரிந்தவராதல் நினைக்க. உயிருடைப் பொருள்களிற் சிறத்தலிற்