உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 காழகம் - அருமணநாடு. பெருங்கதையுட் "கடாரத்திரும் பொடு' (1-58) என வருதலான் இரும்பு காழகத்ததாகத் துணிய லாம். ஆக்கம் - செல்வம். காழ்- பெருமரத் தம்பங்களாகக்கொண்டு இவற்றை யுடைமையாற் காழகமென அருமணத்திற்குத் தமிழர் வழங்கியிருக்கலாம். இதனாக்கம் இப்பெருந் தம்பங்களுமாம். அரியவும் - வலம்புரி போன்ற அரியவையும் ; பெரியவும் -ஒளியினும் உருவினும் பெரிய களிறுபோற் பெரியனவுமாம். நெரிய-இடநெருக் கத்தாற் சில பொருள்கள் தம்முள் உடைந்துபோக என்க. "கானற் பாணி கனக விசயர்த முடித்தலை நெரித்தது" (சிலப். நீர்ப்படை 50, 5.1) என வருவது கொண்டு தெளிக. நெரிதற்கு ஆகாதன என்பார் அரியவும் பெரியவும் என்றார். மற்று அவையும் நெரிய என்றது அரிய பெரிய பொருள்கள் மிகப் பலவாக வந்தீண்டலைக் குறித்தது. இவ்வகை வளங்கள் இடங்கலந்து கிடக்கும் அகன்ற இடனுடைய மறுகின் என்க. தலைமயங்கிய என்பதற்கு உரைகாரர் தலை தெரி யாத என வுரைத்தார். 'வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகு என்னும் இந்திரவிழவூரெடுத்த காதைபடிக்கு நல்லார் " வளக் தம்மிடந் தொறும் மயங்கப்பட்டன, வற்றை யுடைய இடமகன்ற மறுகுகள் " என்றார். ஏற்பது கொளகு. காவிரிப்பயனை ஏற்றுமதிப்பண்டமாகவும் பிறவெல்லாவற்றையும் இறக்குமதிப்பண்டமாகவும் கொள்க. காவிரிப்பயன்-தெல். லுடைய சோழர் நீர்நாடர் கோ' நெல் (யாப். விருத். மேற்கோள்) சோழர் வெண்ணெல் வைப்பினன்னாடு (அகம்.96) என்ப. இந் நெல் லொன்றற்கு இப்பிறவெல்லாம் இறங்குதல் கூறி அவ்வுணவின் உயர்பு குறித்தார். நீர் நாப்பண் ஏமாப்ப இனிது துஞ்சிக்கிளை கலித்துப் பகை பேணாது வலைஞர் முன்றின் மீன்பிறழவும் என்க நீரின் நடுவண் இன்புற இனிது தங்கிக் கிளையுடன் செருக்கி வலை யாகிய பகையைக் கருதாது அவ்வலை படைத்தார் முற்றத்திலே மீன் பிறழ்ந்து துள்ளவும் எ-று. "மீன் கண்டுஞ்சும் பொழுதும்