177 தொன்றுதொட்டுத் திரண்டபொருளை வேள்வியினும் அறத்தினும் வீசும். பல்லாயமொடு - பலபல துணையோடு. வேறுவேறு பதிபழகி பர்ந்த முதுவாயொக்கல்- -பல்வேறு ஊர்களிற் சென்று பழகிய ன் பயனாக அறிவுவாய்ந்த சுற்றத்துடன் என்சு. பலதேயத்துப் பயணஞ்செய்தலான் உண்டாகிய பேரறிவைக்குறித்தல் காண்க. இனி மொழி பலவும் ஓரிடத்திற் கலந்து பெருகுதற்குச் சாறயர் மூதூர் சென்று தொக்காங்கு எனவுவமை எடுத்துக்காட்டினார். மூதூர் விழவிற் பலபாடைமாக்களும் ஒருழிச் சென்று தொகுதல் இயல்பென்க. விழாவை உவமை கூறினார் இப்புலம் பெயர் மக்கள் மகிழ்ந்து கலந்துவ வதிதல் குறிக்க. மொழிபல பெருகிய பழிதீர் தேத்தும் மொழிபல பெருகிய தேத்தும் எனவும், பழிதீர்தேத் தும் எனவுங்கொள்க. ஒருமொழியையே பல மொழியாகப்பெருக்கி உச்சரிக்குந் தேயத்தென்றது சீனதேயத்தை எ-று. இம்மொழி யிங்கனமாதல் வல்லார்வாய்க் கேட்டுணர்க. ஒருமொழியே இருபது வகையாக உச்சரிக்கப்பட்டு வேறுவேறு பொருள்குறிக்கும் வன்மை இம்மொழிக்கே உரித்தென்ப. பழிதீர்தேத்து - ஒழுக்கத்தாற் பழிதீர்ந்ததேயத்து. இதுவும் இத்தேயத்திற்குச் சிறந்ததென்ப. பிறரைப் பழித்துரைத்தற்குரிய வசைமொழிகள் இத்தேயத்திற்கு மிகவும் அரியனவாமென்ப. - உள்ளம் தேஎத்துப் புலம் பெயர் மாக்கள் - தேயத்தினின்று நிலம் பெயர்ந்து வதியுமாந்தர், எ-று. கலந்தினி துறையும் கலத்தல் காரணமாகத் தென்னாட்டாருடன் இனிது வதியும் பட்டி னம் பெறினும் என்க. பலதேயமாக்கள் கலந்திருத்தலை மருவூர்ப் பாக்கத்துக் கூறினார் இளங்கோவடிகள். இதனால் இவ்வாசிரியர் இவ்விரு பாக்கத்தையும் பிற்பாகத்துச் சேரக் கூறுதல் அறியலாம். பல்லாயமொடு பதிபழகி வேறு வேறுயர்ந்த முதுவாயொக்கல் என்றது சோனகரை எனவும் புலம் பெயர் மாக்கள் என்றது சீநரை எனவும் கொண்டு இவ்விருவரும் கலந்தினிதுறையும் பட்டினம் என்க. தமிழ் நாட்டிற்கு மேற்கணுள்ளாரும் கீழ்க்கணுள்ளாருங் கலத்தல்குறித்தது.
பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/92
Appearance