உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 முட்டாச் சிறப்பிற் பட்டினம்.முட்டுறாத சிறந்த வாழ்க்கை யினையுடைய காவிரிப்பூம்பட்டினம் பெறினும் வாரே னென்க. சிறப்பு - தலைமையுமாம். இத்தலைமை, பொருளாற் பெற்ற தலைமை யென்பது "தொகுபோர்ச் சோழன் பொருண்மலி பாக்கத்து' (338) எனவரும் அகப்பாட்டானறியலாம். இதனால் இப்பாலை பொருண்மேற் பிரிவாதல் குறித்தார். "நிலங்கொள வெஃகிய பொலம்பூட் கிள்ளி பூவிரி நெடுங்கழி நாப்பட் பெரும்பெயர்க் காவிரிப் படப்பைப் பட்டினத் தன்ன செழுநகர் நல்விருந் தயர்மா ரேமுற விழுநிதி யெளிதினி னெய்துக (அகம்.205) என நக்கீரர் பாடுதலானும் இதன் விழுநிதிச் சிறப்பறியலாம். இப்பட்டினத்தைக் கரிகாலற் குரியதாகச் சங்கநூற் செய்யுட்கள் கூறாமையு நோக்கிக் கொள்க. கரிகாலனையே பாடிய பொருநராற் றுப்படையும் இது கூறாமை நக்கீரர் "பொலம்பூட் கிள்ளி- பட்டினத் தன்ன" என்பதனால் கிள்ளிவளவற்கே பட்டின முடைமை கூறி, நினைக்க. "செல்குடி நிறுத்த பெரும்பெயர்க் கரிகால் வெல்போர்ச் சோழ னிடையாற் றன்ன என்பதனால் கரிகாலற்கு இடையாறுடைமை தூற்றினின் றெடுத்து முன்னரே காட்டினேன். " (அகம்.141) கூறுதலும் அகநா 'புரவலன் நாடூர் பெயர்கொடை பராஅ யாங்குநீ செல்கென விடுப்பதாற் றுப்படை " (பன்னிரு பாட்டியல்) என்பதிலக்கணமாகவும் இப்பொருநராற்றுப் படையுள் நாடு பெயர் கொடையே பரவப்படுதல் நோக்கிக்கொள்க. இனிப்பொருள் "இழுமென் சும்மை யிடனுடை வரைப்பி னசையுநர்த் தடையா நன்பெரு வாயி லிசையேன் புக்கு '