உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்புழி " தாதலின் ஆண்டு இகரம் னகர 79 னுடை வரைப்பின் " என்பதே ஊர் குறித்த "இடனிடை வரைப்பின் " என்பது னகர உகரமாக எழுதினராற் பிழைபட எழுதப் பட்டதோ என்றும் அதுவே பாடமாகக் கொண்டு உரை நடந்ததோ என்றும் நினைக்க இடந்தருவது. இடை வரைப்பு என்பது நடுக் கோட்டை என்பதோர் ஊர்ப்பெயராகத் தடையில்லை. இடைக் கோட்டை என்பது பெயரெனினு நன்கமையும். இதுகரிகாலற்கு நக்கீரர் கூறிய இடையாற்றுக்கோட்டையே யாமென்று கொள்ளின் இப்பொருநாறு அவற்கு ஊருங் கூறிற்றாகத் துணியலாம். சும்மை (ஒலி)யையும் இடத்தையுமுடைய இடைவரைப்பு என்க. கரிகாலன் என்னும் பெயரும் திருமாவளவன் என்னும் பெய ரும் அடிகள் வேறுவேறாகக் கூறுதல் நுனித்து நோக்கிக்கொள்க. உரைகாரர் இருபெயரையும் ஒருவர் பெயராக வைத்துக்கூறலல்லது வேறுமேற்கோள் காட்ட வியலாமை நன்காய்ந்துகொள்க. பட்டினம் என்றது அதுபெறுதற்கரிய தென்பது கருதிற்று. பெறினும் "முழங்குநீர்ப் படப்பைக் காவிரிக் கிழவன் மாயா நல்லிசைக் கிள்ளி வளவன்" எனவருதலான் இக்காவிரிப்பட்டினம் கிள்ளிவளவனுக்குரியதாதல் நன்குணர்க. (புறம்.399) நெடுமாவளவனாகிய "வாரிருங்கூந்தல்" - நீண்டகரிய கூந்தலென்பர் உரைகாரர். இதனால் இயற்கையழகு முன்னர்க் குறித்தார். வயங்கிழை - விளக் கம் பெறுகின்ற அணிகலங்கள். இவளுறுப்பைச் சார்ந்து இழைவயல் குதல் கருதிற்று. இதனாற் செயற்கையழகு பிற்கூறினார்.வாரிருங் கூந்தல்- வாரிமுடித்த கருங்கூந்தல் என்பது பொ ருந்தும், தான் பிரிந்துழி வாரப்படாமையும் இழைகள் இவனுறுப்பைச் சார்ந்து வயங்காமையும் இவ்விரண்டாலுங் குறித்தார் என்பது பொருந்தும். கூந்தலும் இழையும் திருத்துதற்குரியவன் தா யென்பது குறித்திவ்வாறு தலைவன் கூறினானென்க. இருங்கூந்தலும் வயங்கிழையும் அன்மொழித்தொகைகள். "நாறிருங் கூந்தற் கிழவரைப் படர்ந்தே ' ன் (புறம் 113)