உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டான் 81 பிணியிருந்தது கூறுதலான் அறிக. தப்புவிப்பாரும் தானும் தப்பு தற்கரிய வழி இருந்தது குறித்தல் காண்க. வளர்த்தாங்கு என் னாது வளர்ந்தாங்கு என்றார் பிணித்த பிறரால் வளர்க்கப்பட் எனக் கூறற்கியைபின்மை நோக்கி. கூட்டுள் என்றார் கூடில்லையாயின் அடைத்தாரையே முற்பட அடுதல் குறித்து. இஃது அடைபட்டு வளர்ந்ததற்குவமை. இனி அச்சிறை நின்று தப்பியதற்கு வேறுவமை கூறுகின்றார். பிறர் பிணியகத்திருந்து பீடுகாழ்முற்றி - பகைஞர் சிறையிலிருந்து அங்ஙனம் இருந்த நாள் வளர வளர அவரை அடுதற்குரிய மனவலியும் வயிரத்தோடு முற்றி வளரப்பெற்று (எ-று). அருங்கரை -களிறு தான் ஏறுதற்கரிதா யிடப்பட்ட கரை. கவியக்குத்தி - கவிந்துவிழக் கோட்டாற் குத்தி எ-று. குழிகொன்று - தன்னை அகப்படுத்திய குழியைத் தூர்த்து. குழிகொன்று என்பது குழியை இல்லாதபடி செய்து என்னும் பொருளிற் கூறப்பட்ட தென்க. "நன்றி கொன்றார்" என்புழிப் போலக் கொள்க. தான் அகப்பட்ட குழியையே கோறல் கூறி அகப்படுத்தினாரைப் பின்கோறல் குறித்தார் என்பதும் ஒன்று. பெருங்கை யானை - தனக்கு வேண்டியவற்றைத் தன் பெருங்கை யானே செய்துகொள்ள வல்ல யானை எ-று. பிடிபுக்காங்கு தனக்கொத்தபிடியுடன் புக்குறைந்தாற் போல. இவன் சிறை கடந்ததும் மணந்தான் என்பதை இது குறிப்ப தெனினும் பொருந்தும். "பிடிமுன்பு பொல்லாமை நாணிப் புறங்கடை நின்றதே கல்லார் தோட் கிள்ளி களிறு (முத்தொள்.72) என்புழிக்களிறு முன்னர்ப் புணர்ந்த பிடியைக்கூறுதல் கண்டு கொள்க. ஈண்டுச் சிறைகடந்து இவன் தாயமெய்தியதற்கே உவமையாய்ப் பிடியொடு புகுதல் கூறிற்றாதலான், இவன் இராச்சிய மும் மணமுஞ்சேர வெய்தினான் என்று துணியலாம்.நண் ன்ணார் செறிவுடைத் திண்காப்பி லகப்பட் டிருத்தலான் அதனைக் கடத்தற் 225- 230. குரிய உபாயத்தை நுண்ணிதினுணா நாடி என்றார். ஈண்டு நுண்ணிதினாடியுணர்ந்து என்று மாற்றிக் கொள்க.