உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 லடைப்பட்டனன் என்பதும் முள்ளூரில் அடைத்தனால் யானைக் கிடப்புக்கனன் என்பதும் பொருந்துவது காண்க. மக்களை யானைக் கிடப்புக்க செய்தியைச் சிறைக்கு முன்வைத்தாலும், பின்வைத்தா லும் இவ்வாதத்திற்கு ஓர் விரோதமுமில்லை என்றுணர்க. இத் தடுமாற்றக்காலத்தே இந்நெடுமா வளவன் காரிவழியினனா கிய திருக்கிள்ளியைத் துணைக்கொண்டு அம் முள்ளூர்ச் சிறை கடந்து, தனக்கு முறையான அரசுரிமையை யெய்தினானாவன் என்று நினையத்தகும். சங்க நூல் துணையாக ஆராய்ந்தால். இவ் வளவே துணிந்த முடிபாமென்க. அது ஈண்டுச் சிறைகிடந்தவன் கரிகால்வளவனே யெனின் பொருநராற்றுப்படையொடு முரணுவதன்றி இவன் பிணியிருந்தது பாடும் மாறோகத்து நப்பசலையார் கரிகாலனைப்பாடாது 226 ஆம் புறப்பாட்டால் இக்கிள்ளிவளவனையே பாடியதற்கு மாறுபாடாகி வரலாறழியு மென்க. இனிப் பெற்றவை மகிழ்தல் செய்யான் - தனக்கு முறையாக உரியதாயச் செல்வங்களாக எய்தியவற்றிற்கு மகிழ்தல் செய்யானாகி எ - று. உரியவை இல்லாமற் போயதற்கு வருந்தலாமல்லது அவையே கிடைக்கின் மகிழ்தல் வேண்டாம் என்பது கருத்து. மற்றிவன் மகிழ்தற் பொருட்டுச் செய்தன இவையென்று மேற்கூறுகின்றார். செற்றோர் கடியாண் தொலைத்த கதவு கொல்மருப்பின் யானை. செற்றோர் - தன்னைச் செற்றோர்; இவர் தன்னைப் பிணியகத் திருத்தியவராவர். கடியரண்- படையாளராற் காவலையுடைய எயில். கதவு கொல் மருப்பு - எயிற்கதவங்களைப் பாய்ந்து கெடுக்கும் கொம்பு களையும். அவ்வெயிலகத்துள்ள முடியுடைக் கருந்தலை எ-று. முடியுடைவலியதலை. கருந்தலை என்றது இவனை வணங்காத வலி யுடைய தலையாதல் பற்றி. கருங்கைமள்ளர் என்புழிப்போலக் கொள்க. வணங்காமைக் காரணம் முடியுடையராதல் பற்றி என ஏதுப்படக் கூறினார். புரட்டும் -அம்முடியையும் தலையையும் கீழ் 231-235. அகப்படுத்திப் புரட்டும் எ-று. புரட்டும் முன்தாளில்