இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சந்திரன் வானவெளியெங்கும் தன் வெண்சுடரை வீசுகிறான்; தன் களங்கத்தைத் தன்னிடமே வைத்துக்கொள்ளுகிறான்.
மழைத் துளி மல்லிகைப் பூவிடம் மெதுவாகச் சொல்லிற்று: “உன் உள்ளத்தில் என்னை என்றும் நிலையாக வைத்திரு.”
அந்தோ என்று பெருமூச்செறிந்து மல்லிகைப்பூ தரையில் விழுந்தது.
32