vi
-வைகளும், இரண்டாம் பகுதியில் நானே சொந்தமாக எழுதி யவைகளும் அடங்கியுள்ளன.
இந்நூலைப் படிக்கும் அன்பர்களிடம் நான் ஒன்று கேட் டுக் கொள்கிறேன். ஒரே மூச்சில் எல்லாவற்றையும் படிக்கா தீர்கள். அப்படிப் படிக்க இத் துணுக்குகள் ஏற்பட்டவை யல்ல. எதாவது ஒன்றைப் படித்துவிட்டு அதையே சற்று அமைதியாகச் சிந்தித்துப் பாருங்கள். உங்கள் உள்ளத் தைத் தூண்டவும் விரிந்து விரிந்து பொருள் கொண்டு சிந்தனை அலைகளை எழுப்பவும், புதிய கலையனுபவத்தை உண்டாக்கவும் அதுவும், அதைப் போலவே மற்றவை களும் உதவுமானல் எனது நோக்கம் கிறைவேறியதாகக் கொள்வேன். என் கண்பனுக்கு நான் கொடுத்த பரிசும் வீண் போகாது.
பொங்கல் திருநாள்.
1956. பெ. துரன்
இரண்டாம் பதிப்பின் முகவுரை
பட்டிப் பறவைகளின் வனப்பை உணர்ந்து அன்பர்கள் மகிழ்ந்ததற்கு இப்புதிய பதிப்பே சான்றாக அமைகிறது. அவர்களுடைய சுவையுணர்ச்சியைப் பாராட்டி என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திருந்திய பதிப்பாக வரும் இது முதற் பதிப்பைவிடக் கவிதைச் சுவை மிகுந்தது என்பது என் துணிபு.
பொங்கல் திருநாள், 1961. பெ. தூரன்