பக்கம்:பணக்காரர் ஆகும் வழி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 சிரித்தார். பனங்காட்டு நரி சலசலப் புக்கு அஞ்சாது அல்லவா? இந்தி யாவை வெறுத்து, சாகத் துணிந்த மனிதனுக்கு என்ன வைத்தியம் செய் வது? முத்தையனுக்கு ஒரு மருந்து நினைவு வந்தது. மணி, மந்திரம், ஒளடதம் என்று மருந்தில் மூன்று வகை உண்டல்லவா? இந்த மருந்து பவளம் முதலிய மணிகளால் ஆன தும் இல்லை. செடி, கொடி, வேர் களால் செய்த ஒளடதமும் இல்லை. மந்திர வகையைச் சேர்ந்தது. அந்த மந்திரத்தை முத்தையன் பாட்டாகப் பாடினர். “ எத்தனை சென்மங்கள் வந்து பிறந்தாலும் இந்தியா மண்ணிடை வேண்டுவனே ” என்ற பாட்டுதான் அந்த மந்திரம். அது பெரிய மருந்து. இந்தப் பாட்டைக் கேட்டதும், சாகத் துணிந்த சங்கரன் எ ழு ந் து 9. உட்கார்ந்தான். அவனது உயிரை மீட்க வந்த சஞ்சீவியோ இ ந் த ப் பாட்டு ? சங்கரனுக்கு ஒரு புது உற்சாகம் பிறந்தது. புது தெம்பு உண்டா யிற்று. உண்மையில் அப்போது தான் அவனுக்கு உயிர் வந்தது. சங்கரன் கேள்விமேல் கேள்வி கேட் டான். முத்தையனும் முதல் தரமாகப் பதில் சொன்னர். சங்கரன் : எத்தனை பிறவி எடுத்தா லும் இந்தியாவில் பிறக்க வேண்டும் என்ருயே ? அது ஏன் ? இந்தியாவில் என்ன இருக்கிறது? முத்தையன் : இந்தியாவில் என்ன இருக்கிறதா ? நல்ல கேள் வி! இந்தியாவில் என்ன @మ&ు ? இருக்க வேண்டிய எ ல் லாம் இருக்கின்றன.