பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்பு தரும் அன்புக் கதைகள் - 73 தலைவன் சொற்படி கேட்க வேண்டியது எங்கள் கடமை. குழுத்தலைவன் ஆடியது போதும் என்றால், கட்டுப்பாடு உள்ள நாங்கள் எப்படி எதிர்த்துப் பேச முடியும்? உத்தரவிற்குக் கட்டுப்பட்டு, நாங்கள் வெளியே வந்து விட்டோம். மைதானத்திற்குள் குழுத்தலைவன் தான் எங்களுக்கு எல்லாம். குழுத்தலைவன் பேச்சைக் கேட்டது தவறு என்றால், நீங்கள் என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்கிறேன் என்றான் இளங்கோ - 'யார் உங்கள் குழுத்தலைவன்? தலைமை ஆசிரியர் கண்கள் கோபத்தால் சிவந்து போயின. . -, மூர்த்தி சார்! எல்லோரும் ஒரே நேரத்தில் சத்தமாகக் கூறினார்கள். 'குழுத்தலைவன் என்றால் பெரிய இவன் என்று எண்ணி விட்டாயா? அவ்வளவு திமிர் உனக்கு எப்படி வந்தது ? இதுவரை நமது பள்ளியில் இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததில்லையே! உன் மனதில் நீ என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாய்?' என்று தலைமை ஆசிரியர் படபடத்தார். மூர்த்திக்கு ஒன்றுமே புரியவில்லை. தன்