பக்கம்:பதினாறும் பெறுக.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

15


இளங்: எப்படி ?

கமல: பதினாறு பிள்ளைகளைப் பெறச் சம்மதித்த தலைவி, பத்துப் பிள்ளை களைப் பெற்று பலமிழந்தாள். வறுமையால் நிலைகுலைந்தாள். யாத்திரை சென்று பல வருடங்களுக்குப் பிறகு கூனிக் குறுகித் தடியூன்றியவளாய் ஊர் திரும்பினாள் பெருமகள். நோயுற்றுத் தள்ளாடும் தலைவியைக் கண்டாள். தலைவி வறுமையாலும், நோயாலும் மடிந்தாள். ஓடி வந்தான், தலைவன். கதறினான்; அழுது குமைந்தான். “பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ எங்களை வாழ்த்தியவள் நீதானே ?’ என்று கேட்டான். (பெருமகள் அம்மையார் விளக்கம் சொல்லுகிறார்கள்.)

இளங்: எப்படி ?

கமல (பாடுகிறாள்) -

கல்வியோடு கேள்வியும் கட்டழகும் ஊர்தியும் கற்புடைய மனைவியும் பொற்புடைய மக்களும் அறிவோடு ஒழுக்கமும் அன்னமும் நல் இல்லமும் ஆனந்தபோகமும் ஆநிரையின் யோகமும் நிலத்தோடு நீர்வளம் நிறைவுடைய புகழுமே நீங்காத பொன்கலன் ஆகப்பேறு பதினாறு இத்தனையும் பிள்ளைகளாய் பெற்றுவிட முனைந்தாயே சித்தமிதில் சென்றதனால் சீரழிவு வந்ததுவே !

இளங்: பிறகு, தலைவன் என்ன செய்கிறான் ?

தாழம்: நீங்கள்தானே தலைவர் ? என்ன செய்வீர்கள் ?

இளங்: ஐயயோ! மதி மோசம் போனேனே நானா அந்தக் கதிக்கு ஆளாகவேண்டும் ?

கமல: ஆம். அப்படித்தான் உங்களுக்கு மட்டுமல்ல இளங்கோ, எவர்க்கும் இதுவே நிலை. நாட்டின் பொது நிலையை விளக்குகிறோம். இப்படி. இது நாடகம்தானே ?

இளங்: அம்மாடி ! நான் பிழைத்தேன் !

(நெஞ்சில் கை வைக்கிறான்)

காட்சி 7

இடம் : பரமசிவம் வீடு.

காலம் : காலை.

(முத்தனும் பரமசிவமும் பேசிக்கொண்டே வருகின்றனர்)

பரம: முத்தா கல்லூரி ஆண்டு விழாவுக்கு அழைப்பு வந்திருக்கிறதே.போகாட்டி ஏதாவது நினைப்பாங்களாடா ?

முத்தன்: அவுங்க நம்பளை மதிச்சு அழைப்பு அனுப்பியிருக்காங்க, நாம்ப அவுங்களை மதிச்சு போகத்தானே வேணுமுங்க? நம்ப சின்ன எசமான் நடிக்கிற நாடகம் வேறே இருக்கு துங்களே ?

பரம: ஆமாண்டா முத்தா; நம்ப இளங்கோ நடிக்கிறது .என்ன நாடகம்? அது எப்படியிருக்கும்?

முத்தன்: காலத்துக்குத் தகுந்த புதைக் கதைங்க.

387–5–3ர