வேற்படை ஏந்தி எழுகின்ற. கைகவர் கடுந்தார்=பகைவர்
படைகளைவென்று கைக்கொள்ளவல்ல கொடிய முன்னணிப் படையுடையாராகிய, வெல்போர் வேந்தரும் வேளிரும்=
வெல்கின்ற போர்க்களமே கண்டவர்களாகிய வேந்தர்களும் வேளிர்களும். ஒன்று மொழிந்து=துணையளிக்கும் உறுதியுரை வழங்கி. மொய்வளம் செருக்கி=பேராண்மையுடைமையால் செருக்கு மிகுந்து. மொசிந்து வரும்=கூடித் திரள நின்ற.
மோகூர்=மோகூர்ப்பழையனுடைய வலம்படுகு ரூஉ நிலை அதிரமண்டி = வெற்றிச் சிறப்பு வாய்ந்த படைத்திரளின் அணிகெடுமாறு தாக்கி, நெய்த்தோர் தொட்ட செங்கை
மறவர்=பகைவர் குருதியை அளேந்த தல்ை சிவப்பேறிய
கையினராகிய கோச வீரர்களின் நிறம்படு குருதி= மார்புப் புண்களிலிருந்து வெளிப்பட்ட குருதி. நிலம் படர்ந்து ஓடி=
நிலத்தில் பரவி ஓடி. மழை நாள் புனலில்=மாரிக்காலத்து
புதுவெள்ளம் போல், அவல் பரந்து ஒழுக=பள்ளம் நோக்கிப்
பாய. படுபிணம் பிறங்க=இறந்து வீழ்ந்த பிணங்கள் மலை
போல் குவிய. யாழ்பலசெய்து=எண்ணிலாப் பாழ்களேச் செய்து. படுகண் முரசம் நடுவண் சிலைப்ப=உரைத்த ஒலி எழுப்பும் கண்ணினையுடைய போர் முரசு களத்தின் இடையே
இருந்து முழங்க. வளன்.அற=மோகூர் வளம் முற்றும்
அழியவும். நிகழ்ந்து வாழுநர் பலர்பட- அவ்வரணகத்தே
இருந்து வாழ்ந்தார் பலர் மடியவும். கருஞ்சினை விறல்வேம்பு
அறுத்த - கரிய கிளைகளையுடையதான், பழையன் காவல்
மரமாம் வேம்பினை வெட்டி வீழ்த்திய பெருஞ்சினக்குட்டுவன்
- கடுஞ்சினம்பொருந்திய செங்குட்டுவன. கண்டனம்
வரற்கு - கண்டுவர, யாமும் சேறுகம் - யாமும் செல்
கின்ருேம்; கொளைவல் வாழ்க்கை நும் கிளை இனிது உணி இயர்
=பாடல் தொழிலால் வாழும் இயல்பினரான தும் சுற்றத்தார்
இனிது உண்பாராக; விறலியர் - விறலியர்காள்! நீயிரும்
வம்மின்=நீங்களும் வாருங்கள். - -
92