பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

= மீன் கொத்திப்பறவை, குளிர்ந்த குளத்து நீருள் பாய்ந்து மூழ்கி மீண்டும் மேலே எழுங்காலத்து அதன் கூரிய வாயலகை ஒப்ப, நெடுவள்ஊசி = பலகால் தொழில்பட்டு வெண்ணிறம் பெற்ற நீண்ட ஊசி தைத்து ஆற்றிய நெடுவசி பரந்த வடுவாழ் மார்பின் - பெரிய புண்பரந்து ஆக்கிய வடு விளங்கும் மார்பினையும், அம்புசேர் உடம்பினர் = அம்புகள் பாய்ந்து ஆக்கிய புண்நிறை உடம்பினையும் உடையராகி, வந்து போர் தொடுத்தார் மீது அல்லது, பிற எளியார் மீது. தும்பை சூடாது மலைந்த மாட்சி = தும்பை சூடிப்போய்ப் போர் புரியாதே வெற்றிகொண்ட அன்னேர் பெரும = அத்தகு பெருமை வாய்ந்த பெருவீரர்களின் படைத்தலைவனே! நன்னுதல்கணவல நுதல் அழகு வாய்ந்த நல்லாளாம் இளங்கோ வேண்மாளின் கணவனே! அண்ணல் யானை அடு ப்ோர் குட்டுவ = தலைமைசால் யானைப்படையினையும், பகை வரை அழிக்கும் போரே மேற்கொள்ளவல்ல செங்குட்டுவனே! மைந்துடை நல்லமர் கடந்து = பகைவரின் வலி அழிந்து கெடுதற்குக் காரணமான நல்லபோர் பலபுரிந்து, வலம் தரீஇ = வெற்றியைத் தந்து இஞ்சிவீ விராய பைந்தார் பூட்டி = இஞ்சியும் பூவும் விரவித்தொடுத்த மாலை அணிந்து. சாந்து புறத்து எறிந்த தசும்பு = புறத்தே சந்தனம் பூசப்பெற்ற கட்குடங்கள். துளங்கு இருக்கை=அசைந்தவாறே இருக்கும் இடங்களில். தீஞ்சேறு விளைந்த மணிநிற மட்டம் = தீவிய சுவை மலிந்த கள்ளை, நீலமணி நிறம் உடையதாகுமாறு வடித்துக்கொண்ட தெளிவை. ஒம்பா ஈகையின்=தனக் கெனச் சிறிதும் வைத்துக்கொள்ளாது வழங்கும் இயல்பினுல். வண் மகிழ்சுரந்து = வருவார்க்கெல்லாம் வயிருர வார்த்து. கோடியர் பெருங்கிளை வாழ= கூத்தரின் பெரிய சுற்றம் வாழ்வு பெறுமாறு பொழிந்தவை=வழங்கிய. ஆடு இயல் உளை அவிர் கலிமா எண்ணின்=ஆடியசையும் இயல்புடைய தலையாட்டத்தால் அழகு பெற்ற குதிரைகளை எண்ணப்

39