பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகுந்தால். மன்பதை மருள அரசு படக்கடந்து=மாநிலத்து மக்களெல்லாம் வியக்குமாறு பகையரசரை வென்று. முந்து வினை எதிர்வரப் பெறுதல் காணியர்=முன்னேறிச்செய்யும் போர் எதிர்வரப் பெறுவதைக் காணும் விழைவுடையராய், நின்தேரொடு சுற்றம்=தேர்ப்படை முதலாம் நாற்படை யோடு கூடிய உன் வீரர். ஒளிறு நிலை உயர் மருப்பு ஏந்திய களிறு ஊர்ந்து, மான மைந்தரோடு மன்னர் ஏத்த=மற மானம்மிக்க மறவர்களோடு கூடிய பகைமன்னர்கள், ஒளி வீசும் இயல்பினையுடைய தான்உயர்ந்த மருப்பு உடைய களிறு மீது அமர்ந்து வந்து நின்னேப்பணிந்து கிடக்குமாறு. உலகுடன்மூய=நின் ஆணை செல்லும் உலகமெல்லாம் பரந்து சென்று காவல் மேற்கொண்டிருக்க. மாயிரும் தெண்கடல்= நீ வென்று ஒட்டிய கரிய பெரிய குளிர்ந்த கடலின். மலி திரைப் பெளவத்து= அலைகள்மிக்க நீர்ப்பரப்பில். வெண்தலை குரூஉப்பிசிர் உடைய=வெண்னுரையால் ஆன தலை, பல்வேறு நிறம் காட்டும் நீர்த்துளிகளாக உடைந்துகெடுமாறு. தண்பலவருஉம்=குளிர்ந்து பலவாய் வரும். புணரியிற்பல= அலைகளைக் காட்டிலும் அதிகமாம்.

40