பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலா அம் பாசறை

நிலம் திறம் பெயரும்

கால்ை யாயினும்

கிளந்த சொல் நீ பொய்ப்பு அறியலை

சிறியிலை உழிஞைத் தெரியல் சூடி

கொண்டி மிகைபட

தண்தமிழ் செறித்து

குன்று நிலை தளர்க்கும் உரு மின் சீறி

ஒரு முற்று இருவர் ஒட்டிய ஒள் வாள்

செருமிகுதானை

வெல்போரோயே

51

நிலங்கள் தம் இயல்பு கெட்டு நிலைகுலைந்து நெடும் பஞ்சம்

வந்துற்ற காலத்திலும்,

வழங்கிய வாக் குறு தி கள்

பொய்த்துப் போதலைச்

செய்து அறியாய்.

பகைநாட்டுப் பேரரண்களைக் கைக்கொள்ளும் கருத்துடைய னாகி, அக்கருத்து அறிவிக்கும், சிறிய இலைகளையுடைய

உழிஞைப் பூமாலை அணிந்து

பகை நாட்டிலிருந்து கைப் பற்றிக் கொணரும் பொருட்கள்' அளவிறந்தனவாக.

தண்டமிழ் நாட்டு வீரர் களா

லான படையையே செலுத்தி,

- * . . . - 1. - - மலைகளையும் பிளந்து மண்

ணாக்கும் இடியேறுபோலும்

கடுஞ்சினம் கொண்டு.

ஒரே களத்தில் இரு பேரரசர்

களை வென்று ஒட்டிய.

ஒளி வீசும் வ ட்.ப ைட

யினையும்.

போர் என்றதும் பரிக்கும் நாற்

ப்டையினையும்.

எங்கும் எப்போதும் வெற்றியே காணும் போரி ைன யும்

உடையவனே.