புலா அம் பாசறை 97
சிறப்பினை உடையவரே. பாசறையில் பல முறை அரசனுடன் அவர்களின் வீரத்தை ஒருங்கிருந்து கண்டவர் புலவர். - -
- பாசறையின் கண் அவனுடைய οθpriptr"ειά, முழங்கு கிறது. கடுங்காற்று வீசும்போது கடல் முழங்குவதுபோல மிக்க முழக்கத்தைச் செய்கிறது . அம்முரசு. அம்முரசத்தின் மிக்க ஒசை பரந்த வான் முழுதும் முழங்கிற்று. அங்கிருக்கும். வீரர்களின் நெஞ்சம் போரையே விரும்புகின்றது. மிக்க ஊக்கத்தோடு போரிடும் இயல்பினை உடையவர் அவர், உடல்வலி குன்றி அசைவுற்று மெலிவும் மெலிவினையுடைய ப ைக வ ரது உறைவிடத்தைக் கைக்கொண்டாலன்றி உணவும் கொள்ளமாட்டோம் என்னும் . வஞ்சினம் உடையவர் அlொ. r
இன்றின்து நுகர்ந்தனமாயின் நாளை மண்புனை இஞ்சி மதில் கடந்தல்லது உண்குவமல்லேம் புகாவெனக் கூறிக் கண்ணி கண்ணிய வயவர்' (பதிற்:58)
அவ்வீரர்கள், வஞ்சினம் தபடாமல் முடித்தற்கு நாள் பல கழியினும் தலைநாள் போன்ற ஊக்கமுடைய்வர்கள். போரில்லாக் காலததில் இந்த வீரர்கள் தங்கள் பொழுதை எவ்வாறு கழிப்பார்கள் என்றறியும் ஆர்வமேற்பட்டது புலவருக்கு. நாள்தோறும் போரிட்டு பகைவர் புலத்தே களிறுகள் பலவற்றைக் கவர்ந்தவர்கள் அவர்கள்.
அக்களிறுகளைக் கொன்று அவுற்றின் வெண்கோடு
களைக் கள்ளிற்கு விலையாகத் தருவதைக் கண்டு வியக் கின்றார் புலவர். கள் விற்கும் கடைக்கு அவ்வீரர்கள் தம் தோழரோடன்றித் தனித்தும் செல்வதில்லை. தம் தோழர் களுடன் சுட்கொடி அசையும் கள்ளுக் கடைக்குச் சென்று
புலா-7 -