ஏழாம் பத்து
233
0:ாம் துே 08&
காள்மழைக் குழுஉச்சிமை கடுக்கும் தோன்றல் நோல்மிசைத் தெழுநரும் விரிந்திலங்கு எஃகின் நார்புரிந் தன்ன வாளுடை விழவின் - போர்படு மள்ளர் போந்தொடு தொடுத்த கடவுள் வாகைத் துய்வி ஏய்ப்பப் 15
பூத்த முல்லைப் புதல்சூழ் பறவை
கடத்திடைப் பிடவின் தொடைக்குலைச் சேக்கும்
வான்பளிங்கு விரைஇய செம்பரல்முரம்பின்
இலங்குகதிர்த் திருமனி பெறுடம்,
அகன்கண் வைப்பின் நாடுகிமு வோனே. 20
தெளிவுரை: வளைவான கரிய கொம்பினையும், இனிை
ரம்பின் தொடர்ச்சி முதிர்ந்த செவ்வியைக் கொண்ட
醬 பிறத்தற்கு உரிய இடத்தையும் பெற்ற, பேரியாழி னிடத்தே, பால்ப்பண்ணை அமைத்து வாழியாதனிடம் பரிசின் நாடிச் செல்வோளுகிய, முதிய வாய்மையினையுடைய இரவலனே!
இடிபோல முழக்கஞ் செய்யும் போர்முரசத்தோடு, தானும் வஞ்சினங்கூறிச் சென்று, பகைவரது வேற்படை மறவரின் கூட்டம் நின்றந்த போர்க்களத்தே அவரின் ஆற்றல் கெடுமாறு அவரை அழித்துக் கொன்று, அவர்களுள் எஞ்சி யோரைப் புறங்கொடுத்து ஒடச் செய்தனன். பின்னங்கள் மலிந்த அந்தப் போர்க்களத்தின் பரப்பிலே, அப் பகைவர் தோற்றுப்பணிந்து பழைய திறையாகத் தந்த களிறுகளோடு, நெல்லின் மரக்கர்லால் அளந்து கணக்கிடவியலாத பெரும் நெற்குவியல்களையும், தன்னை வந்து இரந்தோர்க்கு உணவுப் பொருளாகவும் வாழியாதன் தருவான் என்பர்.
தன்னைப் புகைத்து வந்தாரான பகைவரது மிக்க மாறு வாட்டைத் தடுத்து நிறுத்த வல்லதும், பகைவரால் வெல்லு தற்குஅரியதுமான படைவகுப்பினை உடையவன் வாழியாத்ன் பருவகால மேகக்கூட்டங்கள் தங்கியுள்ள மலைச்சிகரத்தைப் போன்ற தோற்றத்தையுடைய கேடகங்களுக்கு மேலெழுந்து சென்று, ஒளிப்ர்ந்து விளங்கும் வேல்களைக் கொண்டவேல் மறவரை உடையவன், மாலை அசைவதுபோல அசைகின்ற அாட்களையுடைய வாள் மறவரை உடையவன், போரிடைக் கலந்து கொள்ளும் இவ்வீரர்கள் விழாக்கோலம் கொண்