பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266

பதிற்றுப்பத்து தெளிவுரை

ጃፀ6 பதிற்றுப்பத்து தெளிவுரை

மணிகளையும் பெறுவார்கள். இத்தகைய வளமுடையதும், அகன்ற இடத்தையுடையதுமான் ஊர்களைக்கெர்ண்ட சேர நாட்டிற்கு உரியோனே!

பகைவரின் போர்க்களிறுகளைக் கொண்ட பெரும் போரானது அழிவடையுமாறு, நீதான் நின் வேலினை உயர்த் தபடி, ஒளிசெய்யும் வாட்கள் ஏந்திய அப் பகைமன்னர்கள் நெருங்கிப் போரிட்டு நின்ற அந்த நிலையினை அழித்து, அவரையும் கொன்றன. நின் வெற்றிமுரசம் குறுந்தடியால் ஆடிக்கப்பெற்று முழக்கத்தைக் கொள்ளுமாறு, நீயும் அரிய போர்த்துறைகள்ை எல்லாம் சிறப்பாகச் செய்து முடித்தன. பெருங்கடலிடத்தே சென்று வந்த மரக்கலத்தைப் பழுது பார்த்துப் பண்டங்களை விற்போரான வாணிகர், மீளவும் கட லிடைச் செல்லுதற்கேற்றவாறு அவற்றைச் செப்பனிட்டு , வலிமைப்படுத்துதலைப்போல, போர் செய்தலினலே புண் பட்ட பெருங்க்ையினையுடைய களிற்றுத்தொகுதியின் பெருந் துயரத்தை மருந்திட்டுப் போக்கி, அவற்றை மீளவும் போர்க் களத்திற்கேற்ற வலிமைபெறச் செய்தன. நின்னிடத்தே வந்து இரந்தோருக்கு அவர் என்றும் வறுமை தீர்ந்து வாழு மாறு பெரும்பொருளை நல்கின. மென்மேலும் வந்து இரப் போர்க்கும் ஈதலை ஒழியாதவளுக, பகைவரிடமிருந்து கொண்ட் குதிரைகளை அவர்கட்கும் வாரி வழங்கின்ை. அததகைய நின் பாசறை இருக்கையினைக் கண்டு செல்வதற் காகவே, யானும் வந்தேன் பெருமானே!

சொற்பொருளும் விளக்கமும் : களிறுடைப் பெருஞ்சமம் களிறுகள் தம்முள் மோதிப் பொருகின்ற் பெரும் போர்க்களப் பகுதி. எஃகு வேல். துதைதில் .நெருங்கி நிற்கும் நிலை. கொன்று - சிதைத்து அழித்து. கடிப்பு குறுந்தடி துறை . போர்த்துறை. போகி செய்து முடித்து. நீந்திய - சென்று வந்த மரம் - மரக்கலம். வலியுறுக்கும் . பழுது பார்த்து வலிமைப் படுத்தும். பண்ணிய விலைஞர் - பண்டங்களை விற்போர். புண் ஒரீஇப் . புண்களை மருந்திட்டுப் போக்கி, பெருங்கை - பெரிய கை. தொழுதி கூட்டம். கழிப்பி . போக்கி. தண்டா - நீங்காத. சிதறு - வாரி வழங்குகின்ற. இருக்கை - பாசறையிருக்கை. செல்கு - செல்லும் பொருட்டு. கால்கொண்டு . மழை கால்கொண்டு. கருவி . இடி மின்ன லைாகிய தொகுதி. வானம் - மேகம். ஏராளர் . ஏர்களை உடையோர். பகன்றை - நீர்க் கொடிவகையுள் ஒன்று: வெள்ளைப்பூப் பூப்பது. இப் பூமாலையை அவர் கழுத்திற்குடிக்