பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

300

பதிற்றுப்பத்து தெளிவுரை

தாங்கிய தரைப்படை காத்து நிற்கும் எல்லைப்புறத்தை யுடையதும், வலிகொண்ட களிற்றின்மீது அமர்ந்தபடி நின் வெற்றிக்கொடியை யானைமறவர் உயர்த்துப் பிடிக்க, அது தான் அசைந்தாடிக் கொண்டிருப்பதுமான், பாசறை யிடத்தே வீற்றிருப்பாய். அப் பாசறையிடத்திருந்து இடை யறாது கல்லெறி பொறியினின்றும் எறியப்படும் கற்களாற் பகைவரது கடத்தற்கரிய அரணிடத்தே உள்ளாரையும் வருத்துகின்றவனே! நாரினாலே அரிக்கப்பெற்ற கள்ளினை யுடைய கொங்கு நாட்டினரின் கோமானே!

நின்னோடும் பகைத்து வந்தாரை எல்லாம் அழித்த சிறப்புடைய பொற்றேரினையுடைய தலைவனே!

சங்கினங்களைக் கொண்ட கடலாகிய முழவின் ஒலியானது ஓயாதே விளங்கிக் கொண்டிருக்கின்ற தொண்டிப் பட்டினத்தாரின் வேந்தனே! நீதான் நெடுங்காலம் வாழ்வாயாக!

ஆராவாரித்தலையுடைய தும்பைப் போரிலே நினக்கு வெற்றி தேடித்தருதலின் பொருட்டாக, நேராகவே நின்னிடத்தே தோன்றி வந்து, நீக்குதற்கரிய வலியுடைய தெய்வங்களின் தொகுதியெல்லாம், நின் கருத்தை வினவியபடியிருக்கும் சிறப்பை உடையாய்!

அத்தெய்வக்கூட்டம் சேர்ந்திருக்கும் அயிரை மலையில் தோன்றி வருகின்ற, புனல்மலிந்த பேரியாறானது நிலத்தை நோக்கி இறங்கிவந்து உதவுமாறுபோல, நின்பால் வந்து இரக்கும் இரவலர்க்கு வரையாது கொடுத்தற்குரிய செழுமையான பலவாகிய பண்டங்களும், அவர்தாம் கொள்ளக் கொள்ளக் குறையாதே இடங்கள்தோறும் மிக்குப் பெருகுவனவாக! சித்திரத்தே தீட்டினாற்போல அழகுபொருத்தியதாக விளங்கும் நெடிய நின் அரண்மனையின் கண்ணே, சித்திரப் பாவை போன்ற பணிமகளிரின் நடுவிலே -

தன் பிரிவு நோயைச் சொல்லிய மாண்பமைந்த பொறிந்துபோயின தன்மையாற் பொலிவுபெற்ற சந்தனக் குழம்பு விளங்கும் மார்பினள்; குளிர்மணம் கமழும் மலர் மாலையைத் தன் கூந்தலிலே சூடியிருப்பவள்; பல்வேறு அணிகளையும் மிகுதியாகப் பூண்டு அவற்றைச் சுமந்து வருபவள் போல விளங்குபவள்; அழகிய இந்திரவில்லானது விளங்க, அழகிய நீலமணிபோல விளங்கும் நிறம்பொருந்திய தொகுதி கொண்ட பெரிய மேகங்கள் சேர்ந்ததும், வேங்கை மரங்கள்