பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒன்பதாம் பத்து

305


சொற்பொருளும் விளக்கமும் : வானம் - மழை. பொழுதோடு - காலத்தோடு; அதாவது பெய்வதற்குரிய காலத்துப் பெய்தல். சுரப்ப - பெய்ய. தோடு - தொகுதி; கூட்டம். மடம் - இளமை. ஏறு - ஆண்மான். புணர்ந்து - கூடியவை யாய். இயல் - திரிய. ஞிமிறு - வண்டு. மாச்சினை - பெரிய மரக்கிளை. மிசையறவு - மிசைதலால் அற்றுப் போதல்; உண்ணல். பல்லான் - பலவகைப் பசுக்கள். உகள் - துள்ளித் திரிய. பயங்கடை - விளைவறுதல். யாணர் புதுவருவாய். கூலம் - தானிய வகைகள். ஊழி - ஊழிக்காலம்; நெடுங் காலம். நடுவுநின்று - நடுநிலையோடு நிலைபெற்று. நாடு- நாட்டு மக்கள். உயர்நிலை உலகம் - வானுலகம். உயர்ந்தோர் - தேவர்; உயர்நிலை பெற்றோரும் ஆம். அரசியல் ஆட்சியொழுக்கம். பிழையாது - பிழைபடாது. மேந்தோன்றி- மேம்பட்டு விளங்கி ஆகியர் - ஆகுக; வியங்கோள் முற்று. புகர் - குற்றம். கனவினும் பிரியா உறையுள் - கனவிலும் தம் காதலரைப் பிரியாதே கூடியுறைவதாக இன்புறுதல்; நனவினும் அவ்வாறே கூடியிருத்தலும் ஆம். மயிர்ச்சாந்து கூந்தலுக்குத் தடவும் மணநெய். துவரா - உலராத. வதுவை மகளிர் - மணப்பெண்கள்.

அருந்ததியை 'வாழ்நாள் அறியும் வயங்கு சுடர்' என்றமை அறிக. மணக்காலத்து அவளின் ஆசியால் தாமும் கற்புடைமை பூண்டு உயர்தல் வேண்டும் என்று நினைத்து அருந்ததியைப் பார்க்கும் மகளிர், பின்னரும் தம்முடைய பிரியாது உறையும் கற்புவாழ்வு நீடித்தலை அறிதற்கும் அவளையே நோக்குவர் என்பதாம். அவள் தோற்றம் மறையின் தம் வாழ்வும் முடியும் என்பது மகளிரது நம்பிக்கை. வாள்நுதல் - ஒளிபொருந்திய நெற்றியையுடைய.அரிவை பெண். காண்வர - அழகு பொருந்த.


90. வலிகெழு தடக்கை !

துறை : காட்சி வாழ்த்து. வண்ணம்: ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும். தூக்கு : செந்தூக்கும் வஞ்சித் தூக்கும்.

[பெயர் விளக்கம்: 'மாண்வினைச் சாபம் மார்புற வாங்கி, ஞாண்பொர விளங்கிய வலிகெழு தடக்கை' எனக்ப.20