பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

306

பதிற்றுப்பத்து தெளிவுரை

கையின் செவ்வியைச் சிறப்பித்தமையால் இப்பெயர் அமைத்தனர்.]

மீன்வயின் நிற்ப வானம் வாய்ப்ப
அச்சற்று ஏமமாகி இருள்தீர்ந்து
இன்பம் பெருகத் தோன்றித் தம்துணைத்
துறையின் எஞ்சாமை நிறையக் கற்றுக்
கழிந்தோர் உடற்றும் கடுந்தூ அஞ்சா 5

ஒளிறுவாள் வயவேந்தர்
களிறொடு கலந்தந்து
தொன்றுமொழிந்து தொழில்கேட்ப
அகல்வையத்துப் பகலாற்றி
மாயாப் பல்புகழ் வியல்விசும்பு ஊர்தர 10

வாள்யுலி வறுத்துச் செம்மை பூஉண்டு
அறன்வாழ்த்த நற்காண்ட
விறன்மாந்தரன் விறல்மருக!
ஈரம் உடைமையின் நீரோர் அனையை!
அளப்பரு மையின் இருவிசும்பு அனையை! 15

கொளக்குறை படாமையின் முந்நீர் அனையை!
பன்மீன் நாப்பண் திங்கள் போலப்
பூத்த சுற்றமொடு பொலிந்து தோன்றலை!
உருகெழு மரபின் அயிரை பரவியும்
கடலிகுப்ப வேலிட்டும் 20

உடலுநர் மிடல்சாய்த்தும்
மலையவும் நிலத்தவும் அருப்பம் வௌவிப்
பெற்ற பெரும்பெயர் பலர்கை இரீய
கொற்றத் திருவின் உரவோர் உம்பல்!
கட்டிப் புழுக்கின் கொங்கர் கோவே! 25