பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
122

சென்ற நூற்றாண்டில் வெளிவந்த இதழ்களில் சில:

1. உபாத்தியாயர் (1887) ஆசிரியருக்கு வேண்டிய பல செய்திகள்
2. கிராம வியவஹாரினி (1899) முதற் பகுதியில் இலக்கியச் செய்திகளும் வேடிக்கை விநோதங்களும் இடம்பெற்றுள்ளன. இரண்டாம் பகுதி கிராம நிர்வாகம் பற்றிக் கூறுகிறது.
3. ""
முத்திங்களுக்கொரு முறை (1900)
பொதுச் செய்திகளும் கிராம விவகாரம் பற்றிய தனிச் செய்திகளும்.
4. கிராமாதிகாரி (திங்கள்) (1900) ‘சென்னை இராஜதானியின் கிராம பரிபாலனம் சீர்படும் பொருட்டுப் பிரசுரிக்கப் படுவது’.
5. கோயமுத்துர் கலாநிதி (திங்கள்) (1890)
6. சித்தாந்த ரத்நாகரம் ஆதிசைவப் பிர பாவம்) (1880) ஆதிசைவ மரபினர் பற்றறிய செய்திகளை வகைப்படுத்தி உரைப்பது.
7. சித்தாந்த ரத்நாகரம் (சித்தாந்த பூஷணம்) (1881) சித்தாந்த பூஷணம் பற்றிப் பல நூல் மேற்கோள்காட்டி விளக்கும் ஆராய்ச்சி.