பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
175

பாடி முடிக்க வேண்டும்’ என்று பலவாறாய் வற்புறுத்திச் சொல்லிவந்ததினுலும் எனக்குள் ஆதி தொடுத்துள்ள பிரிதி வரவரக்கதித்து வந்ததினாலும் காலம் குறுகாது நீடித்ததனாலும், சும்மா வீண் காலம் போக்குவதில் இஷ்டமில்லாதிருந்ததிலுைம் இது வைதீக காலக்ஷேபமாக வாய்த்ததினாலும், மனசில் ஊக்கமுண்டாகித் தொடர்ச்சியாய்விடாப்பிடியாய் முழுபலத்தோடு முயற்சித்து வந்தேனெனினும் ஆண்டாண்டு நேர்ந்த பல விக்கினங்கள் இடையூறுகளால் தடுக்க லுற்று இடைக்கிடை சிறிது காலம் ஒரு செய்யுளாவது எழுதவும் வாய்க்காமல் கழிந்து போனதுமுண்டு. ஆயினும், தேவானுக்கிரகம் முற்றுப்பெறச் செய்தது. கடவுளுக்கே ஸ்தோத்திரம், தேம்பாவணி; இக்காப்பியத்தைப் பிரசித்தப் படுத்தியவரால் எழுதப் பெற்ற முகவுரை:

முதல் வெளியீடு 1849.
(மூன்றாம் பதிப்பு 21—11—1928.)
தேனினுமினிய வித் தேம்பாவணியைக் குறித்து நெடுங்காலங் கற்றாேர் முதன் மற்றநேகரிடத்துப் பற்றிய வாசை யிப்போது தேவனருள நுக்கிரகத்தா னிறைவேற வதினிமித்த மத்தியந்த களிகூறுகின்றாேம். அதேதெனி லிம்மூன்றாம் காண்டத்தோ டஃது முற்று மச்சிற் பதிப்பித்தி யாவர்க்கு மின்ப நன்மையாம்படிவெளிப்படுகின்றது. ஆதலான் முகிலிடத்து மறைந்த செழுஞ்சுட ருல கிருட்போக்கி விளக்கினு மதினின் றுதித்துத் தன்னொளி முகங் காட்டுளி யெத்திக்கினுந் தெண்கதிர் வீசி மிகப் பிரகாசிப்பது போல நூற்றிருபது வருடமளவுங் கையெழுத்துப் பிரதிகளை யித்தேசத் தெத்திசையினும் பரப்பி யவற்றின் மறை முகிலின்