பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
28

காரணமாய அறனும் எனக்காரிய காரணம் நோக்க வைத்தார் என்க,

என விளக்குவது சிறந்தன்றாே?

'கிளவியாக்கம்' என்ற தொடருக்குப் பொருள் கூற வந்த சேனாவரையர்.

'வழுக்களைந்து சொற்களையாக்கிக் கொண்டமையான் இவ்வோத்து 'கிளவியாக்கம்' ஆயிற்று. ஆக்கம் - அமைத்துக் கோடல். நொய்யும் நூறுங்கும் களைந்து அரிசி அமைத்தாரை அரிசியாக்கினர் என்பவாகலின். சொற்கள் பொருள் மேல் ஆமாறு உணர்த்தினமையால் கிளவியாக்கம் ஆயிற்று எனினும் அமையும். பொதுவகையாற் கிளவி என்றமையால், தனி மொழியும் தொடர் மொழியும் கொள்ளப்படும். கிளவி, சொல், மொழி என்னும் தொடக்கத்தன வெல்லாம் ஒரு பொருட் கிளவி

என விளக்குவார்.

பேராசிரியரோ, தொல்காப்பியர் காட்ட நினைத்த பொருள் நிலைகளை நன்கு உணர்ந்தவர். அவர் புல்லையும் மரத்தையும் தொல்காப்பியர் காட்டிய வழியே சென்று காட்டுகிறார்.

'புறக்காழன எனவே, அவ்வழி வெளிறென்ப தறியப்படும். அவை பனையுந் தெங்கும் கமுகும் முதலாயின புல்லெனப்படும்: இருப்பையும் புளியும் ஆச்சாவும் மரமெனப்படும். இங்ஙனம் வரையறை கூறிப் பயந்ததென்னே? புறத்தும் அகத்தும் கொடி முதலாயின காழ்ப்பின்றியும் அகின் மரம் போல் வன இடையிடைப் பொய்பட்டும் புல்லும் மரனும் வருவன உளவாலெனின்-இரண்டிடத்தும் ஏகாரம் பிரித்துக் கூறினமையாலும் 'என மொழிப’ என்று இருவழியும் சிறப்பித்து விதந்தமையானும் சிறு பான்மை அவையும் புல்லும் மரனுமென அடங்கு மென்பது’

என்பது அவர் விளக்கம்.