பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
47


இந்த நடை பெரும்பாலும் அந்த நூற்றாண்டில் வழங்கியதேயாம்; எழுத்துக்களும் பெரும்பாலும் இத் தன்மையாகவே இருந்தன. நாம் முன்னர் மேலே கண்ட தத்துவப் போதகர், வீரமாமுனிவர் முதலியவர்தம் எழுத்துக்களும் இந்த வகையிலேயே அமைந்திருந்தன. இன்று அவற்றைத் திருத்தி அமைப்பவர்கள் புள்ளியிட்டும் கொம்பினைச் கழித்தும் எழுதுகிறார்கள். ஓலையில் புள்ளி இடல் அருமையானமையின் பெரும்பாலும் புள்ளி ஒதுக்கப்பட்டிருக்கலாம். ‘ஏ’ ‘ஓ’ என்று இரண்டும் முன்பு சுழி யும் கோடுமின்றி ‘ஏ’ ‘ஒ’ என்று புள்ளி பெறாது நெடிலோசை பெற்றமையும் ‘எ’ ‘ஒ’ என்று புள்ளி பெற்றுக் குறிலோசை பெற்றமையும் அறிவோம். ‘எய்தும் எகரம் ஒகரம் மெய் புள்ளி’ என்பது இலக்கணமல்லவா? எனவே உயிர்மெய் ஏகார ஓகாரங்கள் கொம்பின் சுழி இன்றி நெட்டொலியைப் பெற்று வரும் வகையிலே அவற்றை எழுதினர். சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் அச்சிடப் பெற்ற சில நூல்களிலும் இந்த எகர ஒகர அமைப்பைக் காண இயலும். உலாந்தக்காரர்கள் (Dutch) பதினெட்டாம் நூற்றண்டின் இடையில் இலங்கையில் இதுபோன்று பல ஆணைகளை அவர் மொழியிலும் சிங்கள மொழியிலும் எழுதியது மட்டுமின்றித் தமிழிலும் எழுதிக் கோட்டை முதலிய பொது இடங்களில் நிலை பெறுமாறு செய்துள்ளார்கள். நம் நாட்டுக் கல்வெட்டு, செப்பேடுகள் போன்று அவை இன்றளவும் வாழ்கின்றன. 1727 ஆம் ஆண்டு மே 17 ஆம் நாளிட்ட அவர்தம் மற்றாெரு செப்பேட்டின் (Palakkaat) வாசகத்தில் ஒன்றிரண்டு கானலாம். (திருந்திய அமைப்பிலேயே அவற்றைத் தருகிறேன்; இதில் ஒன்றிலும் புள்ளியும் நெடிற்குறியும் கிடையா).

3. இதைக் காண்கிற அல்லது வாசிக்கிறதை கேட்கிற சகலமான பேர்களுக்கும் ஆரோக்கியமாக அறியப் பண்ணுகிறதாவது.

4. இந்த இலங்கையிலே கோப்பி யுண்டு பண்ணு தவிப் பேர் கொஞ்சக் காலத்திலே நின்று