இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கருங்குழல் எரிந்த பின்னர் கரியேது?
பனித்தநீர் நனைத்த செங்கண்
பட்டிதழ் விரித்தாள்; காம்பு நுனித்தளிர் விரலால் கண்ணீர் நோக்காட்டைச் சுண்டி விட்டாள்; கனித்தமிழ்க் கண்ணன் வந்த கனவுவாள் நெஞ்சக் கூட்டைத் தனித்தனித் துண்டாய் வெட்டித் தணலிலே போட கொந்தாள்
கருங்குழல் நாக பந்தக்
கவிதையைக் கலைத்தாள்; காந்தள்
விரும்பிடும் கையால் நெற்றி
விளக்கினை அணைத்தாள்; மார்பில்
அரும்பிடும் பார மெல்லாம்
யார்க்கென வெறுத்துத் தேகக் கரும்பினை ஒடித்துத் தேக்குக் கட்டிலின் மீது போட்டாள்.
24 பனித்துளிகள்