பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கருங்குழல் எரிந்த பின்னர் கரியேது?

பனித்தநீர் நனைத்த செங்கண்

பட்டிதழ் விரித்தாள்; காம்பு நுனித்தளிர் விரலால் கண்ணீர் 
நோக்காட்டைச் சுண்டி விட்டாள்; கனித்தமிழ்க் கண்ணன் வந்த
கனவுவாள் நெஞ்சக் கூட்டைத் தனித்தனித் துண்டாய் வெட்டித்
தணலிலே போட கொந்தாள்

கருங்குழல் நாக பந்தக்

கவிதையைக் கலைத்தாள்; 
காந்தள்

விரும்பிடும் கையால் நெற்றி

விளக்கினை அணைத்தாள்; 
மார்பில்

அரும்பிடும் பார மெல்லாம்

யார்க்கென வெறுத்துத் தேகக் கரும்பினை ஒடித்துத் தேக்குக்
கட்டிலின் மீது போட்டாள்.

24 பனித்துளிகள்