பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/537

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

520

பன்னிரு திருமுறை வரலாறு


கட்டளே 2

சிம்மாந்து சிம்புளித்துச் சிந்தையினில் வைத்துகந்து

திறம்பா வண்ணம் தேமாங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய்

புளிமா தேமா

என முன்னுள்ள சீர்கள் நான்கும் காய்ச்சீர்களாகவும் பின் வந்த சீர்கள் இரண்டும் மாச்சீர்களாகவும் வருதல் நட்டராகத்தின் இரண்டாங் கட்டளையாகும். 80-ஆம் பதிகமாகிய இது, முதற் றிருமுறையில் 129 முதல் 132 வரையுள்ள மேகராகக் குறிஞ்சிப் பதிகங்களே யொத்த யாப்பமைதியுடையதாயினும், அப்பதிகங்கள் போன்று தொடர்ந்து செல்லும் ஒழுகிய ஒசையின தாகாது சீர்தோறும் தாள அறுதிபட இடையறவுபட் டிசைக்கும் ஒசையினதா தல் துணுகி நோக்கத்தக்க தாகும்.

31 முதல் 37 வரை புள்ள பதிகங்கள் கொல்லிப் பண் ணுக்கு உரியன. 'கொல்லிக்கு வேறு வகை மூன் ருக எனத் திருமுறைகண்ட புராணம் கூறுத லால் கொல்லிக்கு உரிய பதிகங்கள் மூன்றுகட்டளே பெறும் என்பது புலனும்.

கட்டளை 1.

முந்தை யூர் முது குன்றங் குரங்கணின் முட்டம்

தான தானன தான தனதன தான என வரும் தான தன ன ஆதலும் தானு தன ன ஆதலும் அமையும், பதின் மூன்று எழுத்துக்களால் இயன்ற இக் கட்டளை படியில் தான தானன என்னும் முதலிரண்டு சீர்களும் தன தைன' என ஒரு சீராக ஒன்றியிசைத்தலும், தான தனதன’ என்னும் மூன் ரும் நான்காஞ் சீர்கள் தானன தானு எனப் பிரிந் திசைத்தலும் பொருந்தும்,